அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும், 'நீட்' புத்தகத்தை, தனியார் பள்ளி மாணவர்களுக்கும் விற்பனை செய்ய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 முடிக்கும், அறிவியல் பிரிவு மாணவர்கள், பொது தேர்வுக்கு பின், மருத்துவ படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.
இதில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக, அரசு பள்ளி மாணவர்களும், நீட் தேர்வில், அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற, பள்ளி கல்வி சார்பில், இலவச நீட் பயிற்சி தரப்படுகிறது. தமிழகம் முழுவதும், 412 மையங்களில், இந்த பயிற்சி நடத்தப்படுகிறது.அரசின் பயிற்சியை பெறும் மாணவர்களுக்கு, 'பியர்சன்' என்ற, பிரபல நிறுவனத்தின், நீட் புத்தகம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. ராஜிவ் விஜய் என்ற, ஆசிரியர் தயாரித்துள்ள இந்த புத்தகத்தை, தமிழக பாடநுால் மற்றும் கல்வி சேவைபணிகள் கழகம் சார்பில், அச்சடித்துள்ளனர். முதற்கட்டமாக, ஆங்கில வழி மாணவர்களுக்கு, இந்த புத்தகம் வழங்கப்பட உள்ளது.
புத்தகத்தின் அம்சங்களை, தமிழ் வழியில் மொழிபெயர்க்கும் பணிகளை, பள்ளி கல்வித்துறை துவக்கியுள்ளது. தமிழ் மொழி பெயர்ப்பு முடிந்ததும், பாடநுால் கழகம் வழியாக அச்சிட்டு, நீட் பயிற்சி மைய மாணவர்களுக்கு இலவசமாக வழங்க,அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.அதேபோல, இந்த புத்தகத்தை, தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்யவும், பாட நுால் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பிளஸ் 2 முடிக்கும், அறிவியல் பிரிவு மாணவர்கள், பொது தேர்வுக்கு பின், மருத்துவ படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும்.
இதில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக, அரசு பள்ளி மாணவர்களும், நீட் தேர்வில், அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற, பள்ளி கல்வி சார்பில், இலவச நீட் பயிற்சி தரப்படுகிறது. தமிழகம் முழுவதும், 412 மையங்களில், இந்த பயிற்சி நடத்தப்படுகிறது.அரசின் பயிற்சியை பெறும் மாணவர்களுக்கு, 'பியர்சன்' என்ற, பிரபல நிறுவனத்தின், நீட் புத்தகம் இலவசமாக வழங்கப்பட உள்ளது. ராஜிவ் விஜய் என்ற, ஆசிரியர் தயாரித்துள்ள இந்த புத்தகத்தை, தமிழக பாடநுால் மற்றும் கல்வி சேவைபணிகள் கழகம் சார்பில், அச்சடித்துள்ளனர். முதற்கட்டமாக, ஆங்கில வழி மாணவர்களுக்கு, இந்த புத்தகம் வழங்கப்பட உள்ளது.
புத்தகத்தின் அம்சங்களை, தமிழ் வழியில் மொழிபெயர்க்கும் பணிகளை, பள்ளி கல்வித்துறை துவக்கியுள்ளது. தமிழ் மொழி பெயர்ப்பு முடிந்ததும், பாடநுால் கழகம் வழியாக அச்சிட்டு, நீட் பயிற்சி மைய மாணவர்களுக்கு இலவசமாக வழங்க,அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.அதேபோல, இந்த புத்தகத்தை, தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்யவும், பாட நுால் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி