தொலைத்தொடர்பு துறை ஜியோ வரவுக்கு முன் ஜியோ வரவுக்கு பின் என இரண்டு பாகமாகவே காணப்படுகிறது. ஏனெனில் ஜியோ வந்த பிறகு டெலிகாம் சந்தையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
ஜியோ சலுகைகளை வாரி வழங்கி வாடிக்கையாளர்களை தன்பக்கம் இழுப்பதால், தங்கலது மார்க்கெட்டை நிலைநிறுத்திக்கொள்ள மற்ற நிறுவனங்களும் சேவைகளை வழங்கும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றன.மேலும், நாட்டில் 4ஜி சேவை பயன்பாடு வேகமாக அதிகரிக்க ஜியோ மிகமுக்கிய காரணமாக இருக்கிரது. தற்போது ஜியோ ஆறு மாதத்தில் 5ஜி சேவைகளை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல் பின்வருமாறு, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்ற ஆறே மாதங்களில் இந்தியாவில் 5ஜி சேவைகளை ஜியோ வழங்கும்.அடுத்த ஆண்டு இறுதியில் 5ஜி சேவைக்கான ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற இருக்கும் பட்சத்தில், இந்தியாவில் ஜியோ 5ஜி சேவைகள் 2020 ஆம் ஆண்டின் மத்தியில் துவங்கும் என எதிர்பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி