உலக வரலாற்றில் இன்று ( 29.10.2018 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 29, 2018

உலக வரலாற்றில் இன்று ( 29.10.2018 )


அக்டோபர் 29 (October 29) கிரிகோரியன் ஆண்டின் 302 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 303 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 63 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

969 – பைசண்டைன் படைகள் சிரியாவின் அண்டியோக் நகரைக் கைப்பற்றின.
1422 – ஏழாம் சார்ல்ஸ் பிரான்சின் மன்னனாக முடிசூடினான்.
1618 – ஆங்கிலேய எழுத்தாளரும் நாடுகாண் பயணியுமான சேர் வால்ட்டர் ரேலி இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சிற்கு எதிராக சூழ்ச்சி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்பட்டு மரனதண்டனக்குள்ளாக்கப்பட்டார்.
1665 – போர்த்துக்கல் படையினர் கொங்கோ பேரரசைத் தோற்கடித்து அதன் மன்னன் முதலாம் அண்டோனியாவைக் கொன்றனர்.
1859 – ஸ்பெயின் மொரோக்கோ மீது போரை அறிவித்தது.
1863 – சுவிட்சர்லாந்தில் கூடிய 16 நாடுகளின் பிரதிநிதிகள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அமைக்கத் தீர்மானித்தனர்.
1886 – அன்றைய பிரித்தானிய இந்திய அரசுக்கும், திருவாங்கூர் மன்னருக்கும் இடையே முல்லைப் பெரியாறு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
1901 – ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் வில்லியம் மக்கின்லியைக் கொலை செய்த குற்றத்திற்காக லியோன் சொல்கோஸ் என்பவனுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1913 – எல் சல்வடோரில் பெரும் வெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கானோர் இறந்தனர்.
1922 – முசோலினி இத்தாலியின் பிரதம மந்திரியானார்.
1923 – ஓட்டோமான் பேரரசு முறிவடைந்ததைத் தொடர்ந்து துருக்கி குடியரசானது.
1929 – “கருப்பு செவ்வாய்” என அழைக்கப்பட்ட இந்நாளில் நியூ யோர்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. பெரும் பொருளியல் வீழ்ச்சி ஆரம்பமானது.
1948 – “சாஃப்சாஃப்” என்ற பாலஸ்தீனக் கிராமமொன்றில் புகுந்த இஸ்ரேலியர்கள் 70 பாலஸ்தீனர்களைச் சுட்டுக் கொன்றனர்.
1950 – அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் தொடர் வரலாற்றுப் புதினம் முதற் தடவையாக கல்கி இதழில் வெளிவர ஆரம்பித்தது.
1956 – இஸ்ரேலியப் படைகள் சினாய் தீபகற்பத்தைக் கைப்பற்றி எகிப்தியப் படைகளை சூயஸ் கால்வாய் நோக்கி விரட்டினர்.
1961 – ஐக்கிய அரபுக் குடியரசில் இருந்து சிரியா வெளியேறியது.
1964 – தங்கனிக்கா மற்றும் சன்சிபார் இரண்டும் இணைந்து தன்சானியாக் குடியரசு ஆகியது.
1964 – 565 கரட் (113 கிராம்) “ஸ்டார் ஒஃப் இந்தியா” உட்படப் பல பெறுமதி மிக்க வைரங்கள் நியூ யோர்க் நகரில் உள்ள அமெரிக்க அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டன.
1967 – மொண்ட்ரியால் நகரில் 50 மில்லியன் மக்கள் கண்டு களித்த எக்ஸ்போ 67 உலகக் கண்காட்சி முடிவடைந்தது.
1969 – உலகின் முதலாவது ஒரு கணினியில் இருந்து வேறொரு கணினிக்கான தொடுப்பு ARPANET மூலம் இணைக்கப்பட்டது.
1983 – துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,300 பேர் கொல்லப்பட்டனர்.
1991 – நாசாவின் கலிலியோ விண்கலம் 951 காஸ்ராவுக்குக் கிட்டவாகச் சென்று சிறுகோள் ஒன்றுக்குக் கிட்டவாக சென்ற முதலாவது விண்கலம் ஆனது.
1998 – டிஸ்கவரி விண்ணோடம் STS-95 என்ற விண்கப்பலுடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.
1998 – 39 பேருடன் சென்ற துருக்கிய விமானம் ஒன்று குர்தியத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது.
1998 – சூறாவளி மிட்ச் ஹொண்ட்டூராசைத் தாக்கியது.
1999 – ஒரிஸாவில் இடம்பெற்ற பெரும் சூறாவளியினால் 10,000 பேர் வரை இறந்தனர். 2.5 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.
2002 – வியட்நாமின் ஹோ ஷி மின் நகரில் பல்பொருள் அங்காடி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 60 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
2005 – டில்லியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 60பேர் வரை கொல்லப்பட்டனர்.

பிறப்புக்கள்

1931 – வாலி, தமிழகக் கவிஞர் (இ. 2013)
1971 – மதிவ் எய்டன், அவுஸ்திரேலியத் துடுப்பாட்ட வீரர்
1981 – ரீமா சென், இந்திய திரைப்பட நடிகை
1985 – விஜேந்தர் குமார், இந்தியக் குத்துச்சண்டை மெய்வல்லுனர்

இறப்புகள்

2001 – சுந்தா சுந்தரலிங்கம், இலங்கை வானொலி, மற்றும் பிபிசி தமிழோசை அறிவிப்பாளர்
2007 – லா. சா. ராமாமிர்தம், தமிழ் எழுத்தாளர் (பி. 1916)

சிறப்பு நாள்

துருக்கி – குடியரசு நாள் (1923)

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி