அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவு - தனியார் பள்ளிகளில் 47 சதவீதமாக அதிகரிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 2, 2018

அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவு - தனியார் பள்ளிகளில் 47 சதவீதமாக அதிகரிப்பு!


தமிழகத்தில் தற்போது 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அரசு ஆரம்ப பள்ளிகள் 28 ஆயிரம்,  நடுநிலைப் பள்ளிகள் 12 ஆயிரம் உள்ளன.

இந்த பள்ளிகளில் ஆண்டுதோறும் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை நடக்கும். மாணவர்கள் எண்ணிக்கையை காரணமாக வைத்து தற்ேபாது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.ஆனால்,  அந்தப் பள்ளிகள் மூடப்படாது, அருகில் உள்ள பள்ளிகளோடு இணைக்கப்படும் என்று அரசு தெரிவித்து வருகிறது.

இதையடுத்து தற்போது தமிழகத்தில்  உள்ள பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.செப்டம்பர்  மாதம் 24ம் தேதி வரை எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பில் மட்டும் 10 லட்சத்து 55 ஆயிரத்து 586  குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.அந்த குழந்தைகளில் 47 சதவீதம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில்  சேர்க்கப்பட்டுள்ளனர். வெறும் 26 சதவீதகுழந்தைகள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதாவது தனியார் பள்ளிகளில் 4 லட்சத்து  99 ஆயிரத்து758 குழந்தைகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அரசுப் பள்ளிகளில் 2 லட்சத்து 79 ஆயிரத்து 403 குழந்தைகள்சேர்க்கப்பட்டுள்ளனர்.  அரசுப்  பள்ளிகளில் இந்த ஆண்டு வெறும் 26 சதவீத குழந்தைகள் மட்டுமே சேர்ந்துள்ளது கல்வியாளர்கள்  இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

8 comments:

  1. Protest pandra teachers ithayum konjam consider pannalam oru group form panni government school students increase pannalam education coming soon as an Etta kani for poor children

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. எல்லாம் போராட்டம் என்று கிளம்பி விட்டார்கள் தனியார் பள்ளியை மறைமுகமாக ஊக்குவிக்க

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Arasu palliyil padipavargalukku than arasu vaelai enra oru arivippu seithu arasu aanai veliyittal arasu palliyil strength automatica athigamagum. Anaivarukkum velaiyum kidaikkum. Seiyyuma arasu?

    ReplyDelete
  6. Arasu palliyil padipavargalukku than arasu vaelai enra oru arivippu seithu arasu aanai veliyittal arasu palliyil strength automatica athigamagum. Anaivarukkum velaiyum kidaikkum. Seiyyuma arasu?

    ReplyDelete
  7. ஏற்கனவே எவனும் புள்ளைய அரசு பள்ளில சேக்குறது இல்ல, வாத்தியாருங்க கூட, இதுல போராட்டம் பண்ண மாசத்துக்கு ஒருநாள் ஒதுக்குறானுங்க, அப்பறம் எவன் வருவான்?

    ReplyDelete
  8. Government thaniyar pallikalai ookuvikirathu.ellame arasiyal....kaasu panam thuttuuu...ingu yarum kamarajar pol illai.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி