முப்பருவக் கல்விமுறையில் மாற்றம் வருமா ? -பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 18, 2018

முப்பருவக் கல்விமுறையில் மாற்றம் வருமா ? -பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை!


முப்பருவக் கல்விமுறையில் மாற்றம் செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.தமிழகத்தில் பாடப்புத்தகங்கள் பொதுவாக 5 வருடங்களுக்கு ஒருமுறை திருத்தியமைக்கப்படுகின்றன. அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவால் பாடத்திட்டம் முடிவு செய்யப்படுகிறது. பல்வேறு துறை வல்லுநர்களும் பல்வேறு வகுப்பிற்கான பாடத்திட்டத்தினை வரைவு செய்கின்றனர்.

ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், பாட வல்லுநர்கள் மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள் அந்தந்தப் பாடங்களுக்குரிய நூல்களை எழுதுகின்றனர். இந்நிலையில் முதல்வராக ஜெயலலிதா இருந்த போது, சட்டப்பேரவையில் மாணவர்களின் பாடச்சுமையை குறைப்பதற்காக முப்பருவ கல்வி முறையும், தொடர் மதிப்பீட்டு முறையும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார். மேலும் 1 முதல் 8 ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கு 2012-2013ம் வருட கல்வியாண்டில் முப்பருவ கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2013-2014ம் ஆண்டு முதல் முப்பருவக் கல்விமுறை 9 ம் வகுப்பிற்கும் விரிவு படுத்தப்பட்டது. இந்த முறையின் அடிப்படையில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பாடப்புத்தங்கள் எழுதும் பணிகள் கடந்த ஆண்டு துவக்கப்பட்டு, இந்த கல்வியாண்டில் 1,6,9,11 ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடப்புத்தகம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் 2,3,4,5,7,8,10,12 ஆகிய வகுப்புகளுக்கு புதியப்பாடப்புத்தகம் எழுதும் பணிகள் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்று வருகிறது.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரியிடம்கேட்டபோது, 'பாடத்திட்டத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட கலைத்திட்ட குழுவின் கூட்டத்தில், தற்பொழுது 9ம் வகுப்பிற்கு உள்ள முப்பருவக் கல்விமுறையை மாற்றி 10 வகுப்பில் உள்ளது போல்ஒரே புத்தகமாக வழங்கலாம் என தெரிவித்துள்ளனர்.

மாணவர்கள் 8ம் வகுப்பு வரையில் தொடர் மதிப்பீட்டு முறையில் பயின்று வருகின்றனர். அது மட்டுமின்றி ஒவ்வொரு பருவத்திற்குரிய தேர்வு பாடங்களை மட்டும் படித்து தேர்வு எழுதிய பின்னர், 10ம் வகுப்பில் தொடர்ந்து படித்து தேர்வு எழுதுவதால் சிரமப்படுகின்றனர்.எனவே 9ம் வகுப்பில் முப்பருவ கல்விமுறையை மாற்றலாம் என கூறியுள்ளனர்.

இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் பள்ளிக்கல்வித்துறைக்கு பரிந்துரைத்துள்ளது.

 இது குறித்து பொதுக்கல்வி வாரியத்தின் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்' என்றார்.மேலும், தமிழகத்தில் முதல்வராக ஜெயலலிதா இருந்து போது அறிமுகப்படுத்தப்பட்ட 9 ம் வகுப்பு முப்பருவமுறை திட்டம் வரும் கல்வியாண்டு முதல் மாற்றப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6 comments:

  1. ஒட்டு மொத்தமா எல்லாத்துக்கும் மாத்துங்க. இந்த மாதிரி முப்பருவ முறை எல்லாம் வேஸ்ட், பையன் ஒண்ணுமே படிக்காம மறந்து போறான், இல்லைனா பாடத்த படிக்கிறதே இல்ல, ஒரு டெர்ம் பாடத்த கூட அவனுக்கு படிக்க முடியல, திணருறான். பழைய முறை தான் சிறந்தது, இப்போ CBSEல கூட டெர்ம் முறை இல்ல, வருஷம் முழுக்க பாடத்த படிக்கணும், அங்க கூட ரெண்டு பருவம் தான், செமஸ்டர் மாதிரி, ஆனா இங்க மூனா பிரிச்சு மொத்தமா கெடுத்து வெச்சாச்சு,

    ReplyDelete
  2. கற்பித்தல் முறையிலும்....
    தேர்வு முறையிலும் மாற்றம் வேண்டும்.....

    முழுமையான மற்றும் தொடர் மதிப்பீட்டு கல்வி முறையில் கட்டாயம் மாற்றம் வேண்டும்.....

    ReplyDelete
  3. 9ம் வகுப்பின் முப்பருவ கல்வி முறையை கட்டாயம் மாற்றி 10 ம் வகுப்புக்கு உள்ளது போல் பாடத்திட்டத்தினை மாற்றினால்தான் 10 ம் வகுப்பில் அவர்கள் சிரமமின்றி நேர்ச்சி பெற முடியும்

    ReplyDelete
    Replies
    1. CBSE கொண்டு வந்து அதுல அங்க வேலைக்கு ஆகலைன்னு இப்போ பழைய முறைக்கு மாத்திட்டாங்க, அங்க இரு பருவ முறை இருக்கு, ஆனா முழு ஆண்டு தேர்வுக்கு எல்லாமே படிக்கணும், எல்லாருமே, பத்தாவதுக்கு பரிச்சை இல்லாம ஒரு முயற்சி பண்ணாங்க, ஒரு பருவம் பள்ளி மதிப்பெண், இன்னொரு பருவம் போர்டு எக்ஸாம், ஆனா அதுவும் ஒத்து வரல, cancel பண்ணிட்டாங்க, இப்போ நம்ம ஆளுங்க புக்கு மாத்திருக்காங்க அவங்க அடுத்த வருஷம் மாத்த போறாங்க, பாட சுமை குறைக்க போறாங்களாம், நம்ம ஆளுங்க ஏத்தி விட்ருக்காங்க, பாக்கலாம், இதுக்கு பேசாம தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்த கலைச்சுட்டு CBSE போர்ட்க்கு மாத்திரலாம், அரசாங்கத்துக்கு செலவு மிச்சம், புத்தகம் அத பின்பற்றிட்டு பரிச்சை மட்டும் நாம வெச்சுக்கலாம், கர்நாடகா காரங்க அதான் பண்ணுறாங்க, மேல்நிலை வகுப்புல, அவங்க பாத்திட்ட நூல்கள் ஏதும் இல்ல 11th 12thக்கு சிலபஸ் மட்டும் தான் இருக்கும், reference புக் ncert,

      Delete
  4. வளரறி மதிப்பீடு மற்றும் தொகுத்தறி மதிப்பீடு என்பதை மாற்றி பழைய முறையினையே அனைத்து வகுப்புகளுக்கும் நடைமுறைப் படுத்த வேண்டும்

    ReplyDelete
  5. பாடங்கள் அனைத்துமே அருமை ஆனால் மாணவர்களுக்கு போதிய காலம் இருப்பதில்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி