விதிகளை மீறி அதிக மாணவர்களை சேர்த்திருக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 11, 2018

விதிகளை மீறி அதிக மாணவர்களை சேர்த்திருக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை


விதிகளை மீறி அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை சேர்த்திருக்கும் சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்று 1700 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஒரு வகுப்புக்கான பிரிவுகளில் 40 மாணவர்கள் மட்டுமே பயிலவேண்டும் என்ற விதி உள்ளது.

இந்நிலையில் சிபிஎஸ்இ பள்ளி விவரங்களை பதிவு செய்யும் ஆன்லைன் நடைமுறை மூலம் கணக்கிட்டதில் 1700 பள்ளிகளில் 9 மற்றும் 11 வகுப்புகளில் ஒரு வகுப்பிற்கான பிரிவுகளில் 40கும் அதிகமான மாணவர்கள் பயில்வது கண்டறியப்பட்டது. இந்த பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ள சிபிஎஸ்சி ஒரு மாணவருக்கு ரூ.500 என அபராதம் விதிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விதியை மீறி பள்ளிகளுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.    

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி