பிளஸ் 1 - 'இன்டர்னல் மார்க்' கிடையாது - அரசு தேர்வுத் துறை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 30, 2018

பிளஸ் 1 - 'இன்டர்னல் மார்க்' கிடையாது - அரசு தேர்வுத் துறை


பிளஸ் 1 பொதுத் தேர்வில், தனித் தேர்வர்களுக்கு, இன்டர்னல் மார்க் எனப்படும், அகமதிப்பீடு மதிப்பெண் கிடையாது' என, அரசு தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தமிழக பாடத் திட்டத்தில், பிளஸ் 1 வகுப்புக்கும், 2017ம் கல்வி ஆண்டு முதல், பொதுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கில் சேர்க்கப்படும் என, அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் பின், இந்த விதி மாற்றப்பட்டு, பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, பிளஸ் 2 பொதுத் தேர்வை, பள்ளிக்கு செல்லாமல் நேரடியாக எழுத விரும்பும் தனித் தேர்வர்கள், பிளஸ் 1 தேர்வையும் கட்டாயம் எழுத வேண்டும் என, நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான விதிகளை, அரசு தேர்வுத் துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ளது.இதன்படி, பிளஸ் 1 தனித் தேர்வர்கள், செய்முறை அல்லாத பாடங்களுக்கு மட்டுமே தேர்வு எழுதலாம்.

குறைந்த பட்ச வயது, 15 ஆண்டு, ஆறு மாதங்கள் ஆகியிருக்க வேண்டும். தனித் தேர்வர்களுக்கு அகமதிப்பீடு மதிப்பெண் கிடையாது. எழுத்துத் தேர்வில், 90க்கு பெறும் மதிப்பெண், 100க்கு கணக்கிடப்படும்.பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும், பிளஸ் 2 எழுத அனுமதிக்கப்படுவர்.

ஆனால், தேர்ச்சி பெறாத பாடத்தை மீண்டும் எழுதி, தேர்ச்சி பெற்ற பிறகே சான்றிதழ் வழங்கப்படும்; அதுவரை, மதிப்பெண் பட்டியல் மட்டுமேவழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விதிகளை, அரசு தேர்வுத் துறையின், http://www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி