கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறுகிறது. கடலூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 13, 2018

கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறுகிறது. கடலூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு!


மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த கஜா புயல், காலை நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்கிறது என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

புயலின் வேகம் மேலும் குறைந்தால் கரையைக் கடக்க தாமதமாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கஜா புயல் காலை நிலவரப்படி சென்னைக்கு கிழக்கே 760 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. நாகைக்கு கிழக்கே - வடக்கே 850 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. அதிகாலை 2.30 மணி நிலவரப்படி, மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. கஜா புயல் வலுப்பெற்று இன்று மாலை தீவிர புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தற்போது கஜா புயலானது நாகை மாவட்டத்திற்கு கிழக்கு மற்றும் வடக்கில் 840 கி.மீ. தூரத்தில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. புயலின் வேகம் மேலும் குறைந்தால் கரையைக் கடப்பது தாமதமாக வாய்ப்பு உள்ளது. வேகம் குறைந்தாலும் நவ. 15-ல் கடலூருக்கு பாம்பனுக்கும் இடையே கஜா புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

வங்க கடலில் உருவாகியுள்ள கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெறும். கடலூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் புயலால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி