அரசு பள்ளி கட்டடம் சீரமைக்க நடிகர் ராகவாலாரன்ஸ் நிதியுதவி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 1, 2018

அரசு பள்ளி கட்டடம் சீரமைக்க நடிகர் ராகவாலாரன்ஸ் நிதியுதவி!


நடிகர் ராகவாலாரன்ஸ் நிதியுதவியால் சீரமைக்கப்பட்ட அரசு பள்ளி கட்டடத்தை, நடிகை ஓவியா திறந்து வைத்தார்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அடுத்த செவலபுரை கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.

இப்பள்ளி கட்டடம், பழுதடைந்த நிலையில் இருந்தது. கிராம மக்கள், திரைப்பட நடிகர் ராகவா லாரன்சிடம், பள்ளி கட்டடத்தை சீரமைத்து தருமாறு வேண்டுகோள் விடுத்தனர்.அதனையேற்று, 5 லட்சம் ரூபாய் செலவில் பள்ளி கட்டடத்தை நடிகர் ராகவாலாரன்ஸ் சீரமைத்தார்.

சீரமைக்கப்பட்ட பள்ளி கட்டடத்தை, நேற்று முன்தினம் மாலை, நடிகை ஓவியா திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி, செஞ்சி மாவட்ட கல்வி அலுவலர் ரோஸ்நிர்மலா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி