'கஜா பாதிப்பு மாவட்டங்களில் தேர்வுகள் ரத்தாகாது' - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 29, 2018

'கஜா பாதிப்பு மாவட்டங்களில் தேர்வுகள் ரத்தாகாது'


'கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள் ரத்தாக வாய்ப்பில்லை,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில், கஜா புயல் நிவாரணம் வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற பின், அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுகள், வழக்கம் போல நடைபெறும். ரத்தாக வாய்ப்பு இல்லை.

அப்பகுதி மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, சிறப்பாக பயிற்சி அளிக்கப்படும்.புயலில் பாட புத்தகங்களை இழந்த, 84 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கஜா புயலால் முழுமையாக பாதித்த மாணவர்களுக்கு என்ன நிவாரண வழங்கலாம் என, முதல்வரிடம் ஆலோசித்து, நிவாரணம் வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி