கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
ஈரோடு செங்குந்தர் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு 26 ஆயிரத்து 297 மாணவ, மாணவிகளுக்கு ரூ.9.74 கோடி மதிப்பிலான இலவச சைக்கிள் வழங்கினார். இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:
எந்த அரசு பள்ளிகளையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. பல பள்ளிகளில் ஒரு மாணவர், 2 மாணவர்கள் என குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர்.
அந்த பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான சம்பளம், பராமரிப்பு போன்ற செலவுகளை நாம் கணக்கிட்டு பார்க்க வேண்டி உள்ளது. அந்த அடிப்படையில் அதுபோன்ற பள்ளிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கஜா புயல் பாதித்த நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் மீட்பு பணிகளில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்.
புயல் பாதித்த பகுதிகளில் எங்கெங்கு பாடப்புத்தகங்கள் சேதமடைந்துள்ளதோ, அந்த பகுதிகளில் ஒருவார காலத்திற்குள் பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
Tet posting ila ithu,please ithayavadu udane koduga
ReplyDeleteSonnnatha seaya kaiyalavathan..
ReplyDeleteவிரைவில் அமைச்சர்
ReplyDelete