புயல் பாதித்த பகுதிகளில் பாடப்புத்தகங்கள் ஒருவார காலத்திற்குள் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2018

புயல் பாதித்த பகுதிகளில் பாடப்புத்தகங்கள் ஒருவார காலத்திற்குள் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

ஈரோடு செங்குந்தர் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு 26 ஆயிரத்து 297 மாணவ, மாணவிகளுக்கு ரூ.9.74 கோடி மதிப்பிலான இலவச சைக்கிள் வழங்கினார். இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:

எந்த அரசு பள்ளிகளையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. பல பள்ளிகளில் ஒரு மாணவர், 2 மாணவர்கள் என குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர்.

அந்த பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான சம்பளம், பராமரிப்பு போன்ற செலவுகளை நாம் கணக்கிட்டு பார்க்க வேண்டி உள்ளது. அந்த அடிப்படையில் அதுபோன்ற பள்ளிகளில் கூடுதலாக மாணவர் சேர்க்கை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கஜா புயல் பாதித்த நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் மீட்பு பணிகளில் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளனர்.

புயல் பாதித்த பகுதிகளில் எங்கெங்கு பாடப்புத்தகங்கள் சேதமடைந்துள்ளதோ, அந்த பகுதிகளில் ஒருவார காலத்திற்குள் பாடப்புத்தகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி