'கஜா' நிவாரண நிதி வழங்கிய அரசுப்பள்ளி மாணவர்கள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 24, 2018

'கஜா' நிவாரண நிதி வழங்கிய அரசுப்பள்ளி மாணவர்கள்!



'கஜா' புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ராமநாதபுரம் பேராவூர் அரசுப்பள்ளி மாணவர்கள் 2,900 ரூபாய் பணம் வழங்கினர். அவர்களை கலெக்டர், விவசாயிகள் கவுரவித்தனர்.
இப்பள்ளி மாணவர்கள் 69 பேர் தங்கள் சிறுசேமிப்பாக வைத்திருந்த தொகை 2,900 ரூபாயை நிவாரண உதவியாக தலைமையாசிரியர் காளீஸ்வரியுடன் வந்து கலெக்டர் வீரராகவ ராவிடம் வழங்கினர்.வந்திருந்த மாணவிகளை கலெக்டர் வீரராகவராவ், விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு அழைத்து வந்தார்.

அங்கிருந்த விவசாயிகளிடம், ''உங்களை போன்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக பள்ளி மாணவர்கள் நிவாரணத்தொகை வழங்கி உள்ளனர். அவர்கள் வழங்கிய தொகை சிறிது என்றாலும், அவர்களின் பெரிய மனதை வாழ்த்த வேண்டும்,''என்றார். அப்போது விவசாயிகள் கரவொலி எழுப்பி மாணவர்களை பாராட்டினர்.

5 comments:

  1. TNPSC Hall Ticket 2018: Tamil Nadu Public Service Commission releases various vacancies through TNPSC Recruitment. Candidates should fill the application form so that they can participate in the recruitment process.

    ReplyDelete
  2. Super🌺🌺🌺🌺🌺🌺🌺

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி