தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பு - உயர் நீதிமன்றம் கேள்வி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2018

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி வகுப்பு - உயர் நீதிமன்றம் கேள்வி!



தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஏன் ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி அளிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

திமுக முன்னாள் எம்எல்ஏ அப்பாவு தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இந்த கேள்வியை எழுப்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தமிழ் வழிக் கல்விக்கு அடுத்தபடியாக, 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புகளை அறிமுகப்படுத்துவது குறித்து ஆலோசிக்குமாறும், இந்த விவகாரத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு மாணவர்களின் நலன் கருதி அரசு முடிவெடுக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பாக வரும் டிசம்பர் 6ம் தேதிக்குள் பதிலளிக்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளியில் படித்து மேல் படிப்புக்கு கல்லூரிக்கோ அல்லது பணிக்கோச் செல்லும் போது, அவர்களுக்கு ஆங்கில பேச்சு அறிவு இல்லாமல் சிரமப்படுகிறார்கள். எனவே, ஆங்கிலப் பேச்சு பயிற்சி அளித்தால் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று அப்பாவு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 comments:

  1. In which school England professors came?

    ReplyDelete
  2. இதுக்கு Oxford University la irunthu specialist teacher varavachi PTA la 7500salaryku appointment பண்ணுவாரு நம்மn aalu

    ReplyDelete
  3. Ithe pannunga first

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி