வங்கக் கடலில் உருவானது 'கஜா' புயல்: தமிழகத்துக்கு ஆபத்தா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2018

வங்கக் கடலில் உருவானது 'கஜா' புயல்: தமிழகத்துக்கு ஆபத்தா?



வங்கக் கடலில் உருவாக உள்ள புயலுக்கு 'கஜா' என்று பெயரிடப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் அடுத்த 36 மணி நேரத்தில் உருவாக உள்ள புயலுக்கு தாய்லாந்து சார்பில் வழங்கப்பட்ட கஜா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. வர்தா புயல் போன்ற தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய புயல் என கஜா புயல் எதிர்பார்க்கப்படுகிறது.

தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், 'வடக்கு அந்தமான் கடற்கரை பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும். மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து புயலாக மாறும்.இந்த புயல் கடலூர் அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கஜா என பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் கடந்த ஆண்டு ஏற்பட்ட வர்தா புயல் அளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் மணிக்கு 30- 50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதாலும் கடலின் தன்மை கடலூரை ஒட்டியுள்ள பகுதிகளில் மிக கடுமையாக இருக்கும் என்பதாலும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்' என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.சென்னை உள்ளிட்ட பல்வேறு கடலோர பகுதிகளில் கஜா புயலின் தாக்கம் இருக்கும் என அஞ்சப்படுகிறது.

2 comments:

  1. இலங்கை சார்பாக சூட்டப்பட்ட பெயர்
    கஜா(யானை).
    தாய்லாந்து என தவறுதலாக உள்ளது.

    ReplyDelete
  2. Candidates who are seriously preparing to crack English Literature SET/NET/PGTRB/POLYTECHNIC EXAM may prepare the specially prepared CD with over 4500 Questions with Answers..This CD is designed Literary-Period wise which would arise the interest of the candidates while studying/preparing for the exams..
    Genuine and Interested candidates may Contact on 9600837663..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி