'நீட்' தேர்வு பதிவு: இரண்டு நாட்களே அவகாசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 28, 2018

'நீட்' தேர்வு பதிவு: இரண்டு நாட்களே அவகாசம்


'நீட்' தேர்வு பதிவுக்கு, இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் உள்ளதால், மாணவர்கள் விண்ணப்பிக்க உதவும்படி, பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

பிளஸ், 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டில், நீட் நுழைவு தேர்வு, மே, 5ல் நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்களை, ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய அரசின், தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

அதன்படி, நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, நவ., 1ல் துவங்கியது.அரசு பள்ளி மாணவர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை சார்பில், பள்ளிகளிலேயே விண்ணப்பிக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீட் தேர்வு ஆன்லைன் விண்ணப்பத்துக்கு, இன்னும் இரண்டு நாட்களே அவகாசம் உள்ளது; வரும், 30ம் தேதி பதிவு முடிகிறது. அதற்குள், நீட் தேர்வுக்கான பதிவுகளை முடிக்க வேண்டும் என்றும், மாணவர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்கள் உதவ வேண்டும் என்றும், பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி