இடைநிற்றலை தவிர்க்க பங்களிப்பு திட்டம்; மாணவ குழுக்கள் அமைத்து ‛பிராஜெக்ட்' தயாரிக்க ஏற்பாடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 18, 2018

இடைநிற்றலை தவிர்க்க பங்களிப்பு திட்டம்; மாணவ குழுக்கள் அமைத்து ‛பிராஜெக்ட்' தயாரிக்க ஏற்பாடு!


விருதுநகர் மாவட்டத்தில் இடைநிற்றலை குறைக்க 100
அரசு பள்ளிகளில் மாணவர் பங்களிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.


பள்ளிகளில் மாணவர் இடைநிற்றலை தவிர்க்கவும், கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும் வகையில் ஒருங்கிணைந்த கல்வி திட்டம் சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் 100 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.


9 மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களை கொண்டு, தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கு ஒரு பாடத்திற்கு 5 பேர் என தனி குழு அமைக்க வேண்டும். இம்மாணவர் குழுவினர் ஏதாவது ஒரு தலைப்பில் 'பிராஜெக்ட்' உருவாக்க வேண்டும்.


உதாரணத்திற்கு கணிதம் பாடத்தில் 'அல்ஜிப்ரா' கடினமாக இருக்கும். அவற்றை எளிதாக விடைகாணும் வகையில் பிராஜெக்ட் தயார் செய்திடலாம்.


 இது தவிர சமூகம், குடும்பம், வீடு, உணவு போன்ற ஏதாவது ஒரு தலைப்பில் ஆய்வு செய்து அவற்றில் உள்ள நல்ல மற்றும் தீய அம்சங்களை அதில் விவரிக்க வேண்டும்.


பிராஜெக்ட் வழிகாட்டுதலுக்கு பள்ளிவாரியாக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுக்கள் டிசம்பருக்குள் பள்ளி அளவில் பிராஜெக்ட் வழங்கி, ஜனவரியில் கல்வி மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.


 பிரச்னைகளுக்கு தீர்வு கூறும் சிறந்த பிராஜெக்ட்கள் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதை அமல்படுத்தவும் அரசு நடைமுறைப்படுத்தும்.


 இதுபோன்றவற்றில் மாணவர்கள் ஈடுபாடு அதிகரித்தால் இடைநிற்றல் குறைந்து சமூகத்திற்கு பயனுள்ள வரைவு திட்டம் கிடைக்கும்,' என்கின்றார்.

*எம்.பி.பி.எஸ்., மாணவர் சேர்க்கை அதிகரிப்பு; உதவி இயக்குனர் விசாரணை!*


மதுரை அரசு மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கையை 250 ஆக உயர்த்துவதற்கான தேவைகள் குறித்து மருத்துவ கல்வி உதவி இயக்குனர் (திட்டம்) சபிதா விசாரணை நடத்தினார்.


இங்கு 2019 முதல் மாணவர் சேர்க்கையை 250 ஆக உயர்த்த மருத்துவ கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.


 இதற்காக மாணவர்கள் விடுதி, வகுப்பறைகளுடன் கூடிய ஆடிட்டோரியம், நவீன நுாலகம் கட்டுமான பணிகள் படிப்படியாக நடக்க உள்ளது.


மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்ப பேராசிரியர் பணியிடமும் நிரப்ப வேண்டும். இதற்கான பணிகள் எந்தளவிற்கு நடக்கிறது என்பது குறித்து மருத்துவ கல்வி உதவி இயக்குனர் சபிதா விசாரணை நடத்தினார்.


 மருத்துவமனையில் ஜப்பான் நிதி 320 கோடி ரூபாயில் ஆப்பரேஷன் தியேட்டர் உட்பட 4 மாடி கட்டடம் கட்ட திட்டமிட்டுள்ளனர். இது குறித்தும் விசாரித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி