TNSC - தவறான செய்திகள் குறித்து கவலைப்படாமல் தேர்வுக்கு தயாராக வேண்டுகோள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 7, 2018

TNSC - தவறான செய்திகள் குறித்து கவலைப்படாமல் தேர்வுக்கு தயாராக வேண்டுகோள்!


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் செய்திக்குறிப்பு :
தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள இரண்டாம் தொகுதி பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் சிலவற்றை நடப்பாண்டில் தமிழில் நடத்த முடியாது என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளதாக சில அவதூறு செய்திகள் ஊடங்கங்களில் வெளிவந்து தேர்வர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தெரிவிக்கப்படுவது யாதெனில், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து தொகுதி தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்படுகின்றன என்பது தேர்வர்கள் அனைவரும் அறிந்ததே. தொழில்நுட்ப தேர்வுகளுக்கான வினாத்தாள்களும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் தயாரிக்கப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள பல்கலைகழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆங்கில மொழியை மட்டுமே பயிற்று மொழியாகக் கொண்ட சில பாடங்களுக்கும் மட்டுமே ஆங்ககிலத்தில் வினாத்தாட்கள் தயாரிக்கப்படுகின்றன. பயிற்று மொழி தமிழில்இருந்தால் வினாத்தாள்களும் கண்டிப்பாக தமிழில் தயரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

இதுகுறித்த தகவல்கள் அப்பதவிகளுக்கான அறிவிக்கை வெளியிடப்படும்போதே விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. 11.11.2018 அன்று நடைபெறவுள்ள தொகுதி-II முதனிலைத்தேர்வுக்கு, பொதுத்தமிழ் அல்லது பொது ஆங்கிலத்துடன் பொது அறிவு மற்றும் Aptitude and Mental Ability Test ஆகிய கேள்விகள் மட்டுமே இடம்பெறும்.

இதற்கான கேள்வித்தாள்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளது. முதன்மை எழுத்துத்தேர்வுக்கு பொது அறிவு வினாக்கள் மட்டுமே இடம்பெறும் அத்தேர்வுக்கான வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இருக்கும். இதுகுறித்த தகவல்கள் இத்தேர்வுக்கான அறிவிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொகுதி-II தேர்வு 11.11.2018 அன்று திட்டமிட்டபடி நடைபெறும்.

எனவே தேர்வர்கள் இதுகுறித்து வெளியாகும் ஆதாரமற்ற, தவறான செய்திகள் குறித்து கவலைப்படாமல் தேர்வுக்கு தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.இரா. சுதன், இ.ஆ.ப., தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி