1.95 லட்சம் மாணவியர் கடிதம் எழுதி சாதனை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 21, 2018

1.95 லட்சம் மாணவியர் கடிதம் எழுதி சாதனை



பெண் குழந்தை பாதுகாப்பு குறித்து, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, 1.95 லட்சம் மாணவியர், பெற்றோருக்கு கடிதம் எழுதி, சாதனை படைத்தனர்.

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்பில், 'பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம்' என்பதை வலியுறுத்தி, விழிப்புணர்வு கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடந்தது.

'என் கனவு' என்ற தலைப்பில், மாவட்டம் முழுவதும் உள்ள, 2,508 பள்ளிகளில் உள்ள, ஒரு லட்சத்து, 94 ஆயிரத்து, 940 மாணவியர், ஒரே நேரத்தில், தங்கள் பெற்றோருக்கு கடிதம் எழுதி, சாதனை படைத்தனர். கலெக்டர் கந்தசாமி துவக்கி வைத்தார்.

இதில், 'உயர்கல்வி படிக்க வேண்டும்; இளம் வயதில், திருமணம் செய்து வைப்பதை கைவிட வேண்டும்; ஆண் குழந்தைகளை போல், தங்களுக்கும் சுதந்திரமாகவும், சுயமாகவும் முடிவெடுக்கும் வாய்ப்பை அளிக்க வேண்டும்' என்பதை, வலியுறுத்தி இருந்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி