குரூப் 2 தேர்வு: கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 27, 2018

குரூப் 2 தேர்வு: கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு


குரூப் 2 முதன்மைத் தேர்வு எழுதும் தேர்வர்கள் கட்டணம் செலுத்த வரும் 10-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே சான்றிதழ்களை பதிவேற்றவும் கடைசி வாய்ப்பாகும்.

இதுகுறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-குரூப் 2-இல் அடங்கிய பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு முடிந்த நிலையில், முதன்மைத் தேர்வு நடைபெறவுள்ளது.

இதற்கான எழுத்துத் தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் வரும்10-ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு முன்பாக அசல் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.மேலும், முதல் நிலை எழுத்துத் தேர்வுக்குக் கட்டண விலக்கு கோராத விண்ணப்பதாரர்கள் அனைவரும் முதன்மைத் தேர்வுக்கான கட்டணமான ரூ.150-ஐ தேர்வாணைய இணையத்தில் (‌w‌w‌w.‌t‌n‌p‌s​c‌e‌x​a‌m‌s.‌n‌e‌t)  மட்டுமே வரும் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்கு முன்பாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தைச் செலுத்தாவிட்டால் தேர்வர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டிய விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்திய பின்னரே தங்களது சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியும் என்று தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி