200 ஆசிரியர்கள் உடல்நிலை பாதிப்பால் பதற்றத்தில் பள்ளிக்கல்வி வளாகம் நாளை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 27, 2018

200 ஆசிரியர்கள் உடல்நிலை பாதிப்பால் பதற்றத்தில் பள்ளிக்கல்வி வளாகம் நாளை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு!!



போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, 175 பேருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. 
இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரும் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று திரும்பி, மீண்டும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு,  எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தங்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர். ஆசிரியர்கள் உடல்நிலை பாதிப்பால் பதற்றத்தில் 
பள்ளிக்கல்வி வளாகம் நாளை அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு வார்த்தைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி