அரசு பள்ளிகளில், இரு பாடங்களை நடத்தும் ஆசிரியர்களுக்கு, புதிய பாடத்திட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்க, கெடுபிடி காட்டுவதால் அதிருப்தியடைந்துள்ளனர்.
தமிழகத்தில், நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்புக்கு பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டுள்ளன. புத்தக பக்கங்கள் அதிகமாக இருந்ததால், இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டன. முதல்பகுதி பாடத்திட்டம் நடத்தப்பட்டுள்ள நிலையில், இரண்டாம் பகுதி புத்தகங்கள், பள்ளிகளுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளன.
பாடங்கள் நடத்துவது குறித்து, முதுகலை ஆசிரியர்களுக்கு, இரு நாள் பயிற்சி வழங்கப்படுகிறது.சேலம் மாவட்டத்தில், பல மேல்நிலைப்பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைவால், உயிரியல், தாவரவியல் பாடங்களை, ஒரே ஆசிரியர் நடத்தும் நிலை காணப்படுகிறது.கடந்த, 6, 7ல், தாவரவியல் ஆசிரியர்களுக்கு, இரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.
விலங்கியல் பாடம் நடத்தும் ஆசிரியர்களுக்கு, டிசம்பர் 10 (நாளை), 11ல், மேட்டுப்பட்டி, சேலம் இன்ஜினியரிங் கல்லூரியில் பயிற்சி நடத்தப்படுகிறது. இதில், ஏற்கனவே தாவரவியல் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பங்கேற்கக்கூடாது என, அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்
Computer science ku ennum first volumeke entha training classum kudukala
ReplyDeleteNadatha solvathu botany um & zoology um.....but training oru subject kku mattumaaa...????? Enna niyayam govt.....!!!!???
ReplyDeletePg Trb commerce friends nala padinga 9952636476
ReplyDeleteLast chance for commerce friends
ReplyDeleteWhat about tet
ReplyDeletesangu thaan
Delete