303 அரசு பள்ளிகள் புயலால் அதிக சேதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2018

303 அரசு பள்ளிகள் புயலால் அதிக சேதம்


'கஜா' புயலால், 303 அரசு பள்ளிகளில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளதாக, பள்ளி கல்வி துறை ஆய்வில் தெரியவந்துள்ளது.

வங்க கடலில் உருவான கஜா புயல், டெல்டா மாவட்டங்களை துவம்சம் செய்துள்ளது.அரசு நிறுவனங்கள், தனியார் சொத்துகள் என, அனைத்துக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டுஉள்ளது.

பள்ளி கல்வி அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட ஆய்வில், 500 பள்ளிகள் சேதம் அடைந்தது தெரியவந்தது. அவற்றில் லேசான சேதமான பள்ளிகள், ஒரு வாரத்துக்கு முன் திறக்கப்பட்டன.தஞ்சையில், 11; திருவாரூரில், 28, புதுக்கோட்டையில், 89, நாகையில், 175 என, மொத்தம், 303 பள்ளிகள் அதிக சேதம் அடைந்துள்ளன. மோசமாக சேதம் அடைந்த, 303 பள்ளிகளை, கூடுதல் நிதி ஒதுக்கி சீரமைக்க, பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார்.

சேதமான பள்ளிகளை உள்ளாட்சி அமைப்புகள், பள்ளி கல்வி நிதி, மத்திய அரசின் ஒருங்கிணைந்த கல்வி திட்ட நிதி உள்ளிட்டவற்றின் கீழ், போர்க்கால அடிப்படையில் சீரமைக்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதுவரை, 'நபார்ட்' திட்டத்தில் உள்ள கட்டடங்களில், வகுப்புகளை நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி