'கூகுள்' நிறுவனம் நடத்திய, 'ஆன்லைன்' தேர்வில் ஒரே அரசுப் பள்ளியை சேர்ந்த 50 மாணவர்கள் தேர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 21, 2018

'கூகுள்' நிறுவனம் நடத்திய, 'ஆன்லைன்' தேர்வில் ஒரே அரசுப் பள்ளியை சேர்ந்த 50 மாணவர்கள் தேர்ச்சி


கூகுள்' நிறுவனம் நடத்திய, 'ஆன்லைன்' தேர்வில், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள், 50 பேர், தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இணைய தேடுபொறியான, 'கூகுள்' நிறுவனம், பள்ளி மாணவ - மாணவியரிடையே, 'அனிமேஷன்' செய்ய தேவையான அடிப்படை குறித்து, ஆண்டுதோறும், ஆன்லைன் தேர்வு நடத்துகிறது.ஆண்டு இறுதியில், நவம்பர் மாதம் நடைபெறும் இத்தேர்விற்கு, நாடு முழுவதும் ஏராளமான மாணவ - மாணவியர் பங்கேற்கின்றனர்.அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள், 50 பேர் பங்கேற்றனர்.கடந்த நவம்பரில் நடைபெற்ற இத்தேர்வுக்கான முடிவுகள், இரு நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

இதில், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியிலிருந்து பங்கேற்ற, 50 மாணவ - மாணவியரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.முழுவதும் கணினி மயமாக்கப்பட்ட இப்பள்ளியில் பயிலும், ஏழைமாணவர்கள், 'கூகுள்' நிறுவன தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது, மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி