'நிலுவைத் தொகை பலன்களை, 2016 ஜனவரியில் இருந்து வழங்க வேண்டும் என்ற அரசு ஊழியர்களின் கோரிக்கையை, ஒருநபர் கமிஷன் பரிசீலனை செய்ய முடியுமா என்பதை, ஜன., 7ல் தெரிவிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
அதுவரை வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பதாக, தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில் உறுதியளிக்கப் பட்டது.'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஏழாவது சம்பளக் கமிஷனின், 21 மாத நிலுவைத் தொகையை வழங்கவேண்டும்' என வலியுறுத்தி, 'ஜாக்டோ - ஜியோ' சார்பில், டிச., 4 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.
வழக்கறிஞர் லோகநாதன், 'வேலை நிறுத்தத்திற்கு தடை விதிக்க வேண்டும்' என, உயர் நீதிமன்ற கிளையில் மனு செய்தார். விசாரணையின் போது, வேலை நிறுத்தத்தை, டிச.,10 வரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக, ஜாக்டோ - ஜியோ சார்பில் உறுதியளிக்கப்பட்டது.நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு நேற்று விசாரித்தது.நீதிபதிகள், 'ஓய்வூதிய திட்டம் தொடர்பான, ஸ்ரீதர் கமிஷனின் அறிக்கையை, அரசு தரப்பில், நாளை தாக்கல் செய்ய வேண்டும்.
'நிலுவைத் தொகை பலன்களை, 2016 ஜனவரியில் இருந்து வழங்க வேண்டும் என்ற ஊழியர்கள் தரப்பு கோரிக்கையை, சித்திக் கமிஷன் பரிசீலனை செய்ய முடியுமா என்பதை, ஜன.,7ல் தெரிவிக்க வேண்டும்' என்றனர்.அதுவரை வேலை நிறுத்தத்தை, தற்காலிகமாக ஒத்திவைப்பதாக, ஜாக்டோ - ஜியோ தரப்பு வழக்கறிஞர், நீதிபதிகளிடம் உறுதியளித்தார்.
Total waste.....panam varathu...
ReplyDelete