எஸ்.ஐ., பணிக்கு தேர்வு தேதி அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2018

எஸ்.ஐ., பணிக்கு தேர்வு தேதி அறிவிப்பு


காவல் துறையில், விரல் ரேகை பிரிவுக்கு, 202, எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்வதற்கான எழுத்து தேர்வு தேதிகள், அறிவிக்கப்பட்டு உள்ளன.இந்த பணிக்கு, 40 ஆயிரத்து, 236 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

பொதுப்பிரிவில், 34 ஆயிரத்து, 933 பேரும்; காவல் துறையை சேர்ந்த, 2,608 பேரும், எழுத்து தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்.இவர்களுக்கு, சென்னை, காஞ்சிபுரம், என, எட்டு மையங்களில், எழுத்து தேர்வு நடக்கிறது. காவல் துறையை சேர்ந்தோருக்கு, 22ம் தேதியும், பொதுப்பிரிவினருக்கு, 23ம் தேதியும், தேர்வு நடக்க உள்ளது. தகுதியுடையோர், நுழைவுச்சீட்டை,www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி