ரூ.5,000 அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இதையும் விட்டு விட்டால் ரூ.10,000 அபராதம் செலுத்த வேண்டி வரும். கடந்த 2017-18 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி கடந்த ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. கேரளாவுக்கு மட்டும் வெள்ள பாதிப்பை கருத்தில் ெகாண்டு செப்டம்பர் வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு டிசம்பர் 31ம் தேதி வரை ரூ.5,000 அபராதம் செலுத்தி வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம்.
வரி செலுத்துவோர் தங்கள் வருமான கணக்குகளை தாமதமாக தாக்கல் செய்தால் அதற்கு அபராதம் விதிக்கும் உரிமை வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், 2017 பட்ஜெட்டில் கால தாமதத்துக்கு ஏற்ப அபராதம் வசூலிப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் வருமான வரிச்சட்டம் 234எப் பிரிவில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
இதன்படி, வருமான வரி கணக்கு சமர்ப்பிக்க வேண்டிய, ஆண்டு வருவாய் ரூ.5 லட்சத்துக்கு மேல் உள்ள தனி நபர்கள் முந்தைய நிதியாண்டுக்கான வருமான வரிக்கணக்கை உரிய கெடு தேதிக்கு பிறகு டிசம்பர் 31ம் தேதி வரை ரூ.5,000 செலுத்தி கணக்கு தாக்கல் செய்யலாம். டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு, அதாவது ஜனவரி 1ம் தேதி முதல் மார்ச் 31 வரை ரூ.10,000 அபராதம் செலுத்தி தாக்கல் செய்யலாம். ரூ.5 லட்சத்துக்கு கீழ் வருவாய் உள்ளவர்கள் அடுத்த ஆண்டு மார்ச் 31க்குள் ரூ.1,000 அபராதம் செலுத்தி கணக்கு தாக்கல் செய்யலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி