போராட்டத்தை சமாளிக்க பகுதி நேர ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 3, 2018

போராட்டத்தை சமாளிக்க பகுதி நேர ஆசிரியர்கள்


ஜாக்டோ - ஜியோ'வின் போராட்டத்தை சமாளிக்க, பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் கணினி ஆசிரியர்களை முழு நேரமும் வகுப்பு எடுக்க வைக்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துஉள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சங்கங்கள் இணைந்து, ஜாக்டோ - ஜியோ என்ற கூட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த கூட்டமைப்பினர் ஆண்டுதோறும், தேர்வுகள் நடக்கும் நேரம், தேர்தலுக்கு முந்தைய காலம் மற்றும் புயல் போன்ற பாதிப்புகளால், நிவாரண பணிகள் நடக்கும் காலங்களில், போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். அந்த வகையில், நாளை முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு நடக்க உள்ளதால், அதற்கு மாணவர்களை தயார் செய்ய வேண்டியுள்ளது. இந்த நேரத்தில், ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் செய்வதால், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.இதை சமாளிக்க, அரசு பள்ளிகளில் பணியாற்றும், பகுதி நேர ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர கணினி ஆசிரியர்களை, முழு நேரமும் வகுப்புகள் எடுக்க வைக்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்து உள்ளது.

ஜாக்டோ - ஜியோவினர் அரசுக்கு நெருக்கடி அளிக்கும் காலங்களில், 10 ஆயிரத்துக்கும் மேல் உள்ள, பகுதி நேர ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகத்தை நடத்தி, அரசுக்கு உறுதுணையாக இருந்து உள்ளனர். அந்த அடிப்படையில், தற்போதும், பகுதி நேர ஆசிரியர்களுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. அவர்களின் பட்டியலை எடுத்து, பள்ளிகளில் முழுநேர பணிக்கு வர, பள்ளி தலைமை ஆசிரியர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

4 comments:

  1. அரைநாள் தான் போகனும்

    ReplyDelete
  2. யாரும் முழு நேரம் வேலைபார்க்காீர்கள் நாம் பகுதி நேர ஆசிரியர்கள்தானே

    ReplyDelete
  3. பகுதி நேர ஆசிரியர்களே! உங்கள் கோரிக்கையை ஏற்காதவர்களின் கோரிக்கையை நீங்களும் ஏற்காதீர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி