கழிப்பறை கட்டித்தராத தந்தை : புகாரளித்த சிறுமிக்கு பாராட்டு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 15, 2018

கழிப்பறை கட்டித்தராத தந்தை : புகாரளித்த சிறுமிக்கு பாராட்டு


கழிப்பறை கட்டித்தராத தந்தை மீது புகாரளித்த சிறுமியின்வீட்டுக்கு சென்ற கலெக்டர், அவரை பாராட்டினார்.வேலுார் மாவட்டம், ஆம்பூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி, இஷானுல்லா என்பவரின் மகள், ஹனீபா ஜாரா, 7; இரண்டாம் வகுப்பு மாணவி.இவர், கடந்த, 10ல் ஆம்பூர் போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில், 'பல ஆண்டுகளாக கழிப் பறை கட்டித்தராமல், ஏமாற்றி வரும் தந்தையை கைது செய்ய வேண்டும்' என, குறிப்பிட்டிருந்தார்.

கலெக்டர் ராமன் உத்தரவுப்படி, சிறுமியின் வீட்டில், கழிப்பறை கட்டித்தரும் பணியில் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆம்பூர் நகராட்சி துாய்மை இந்தியா திட்ட துாதராக, இந்த சிறுமி நியமிக்கப்பட்டார்.நேற்று காலை, சிறுமியின் வீட்டுக்கு சென்ற கலெக்டர் ராமன், சிறுமியை பாராட்டினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி