பொங்கல் பரிசு தொகுப்பு - தமிழக அரசு அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2018

பொங்கல் பரிசு தொகுப்பு - தமிழக அரசு அறிவிப்பு!


 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பொங்கல் சிறப்பு தொகுப்பில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, ஏலக்காய் மற்றும் 2 கரும்பு துண்டு ஆகியவை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் திருநாளையொட்டி ஆண்டுதோறும் நியாயவிலைக் கடைகள் மூலம் தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பொங்கல் சிறப்பு தொகுப்பு அரிசி வாங்கும் குடும்ப அட்டைதாரர்கள், காவலர் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். பொங்கல் திருநாளுக்கு முன்பே நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி