முதுகலை ஆசிரியர்களுக்கு புதிய பாட நூல் புத்தாக்கப் பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2018

முதுகலை ஆசிரியர்களுக்கு புதிய பாட நூல் புத்தாக்கப் பயிற்சி


அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்களுக்கு 11ஆம் வகுப்புக்கான புத்தாக்கப் பயிற்சி தொடக்க விழா புதுக்கோட்டை சிவபுரம் ஜே.ஜே.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது

புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் நடராஜன் வரவேற்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா தலைமை வகித்துப் பயிற்சியைத் தொடங்கி வைத்துப் பேசினார் முதற்கட்டமாக டிச.6 மற்றும் 7 ஆம் தேதிகளில் முதுகலை தாவரவியல் ஆசிரியர்களுக்கும், இரண்டாம் கட்டமாக டிச.10,11 ஆம் தேதிகளில் தாவரவியல், விலங்கியல் ஆசிரியர்களுக்கும்

மூன்றாம் கட்டமாக டிச.12,13 தேதிகளில் விலங்கியல் ஆசிரியர்களுக்கும்,13,14 தேதிகளில் வேதியியல் ஆசிரியர்களுக்கும், நான்காம் கட்டமாக டிச.17,18 தேதிகளில் வேதியியல் ஆசிரியர்களுக்கும் ஐந்தாம் கட்டமாக டிச.17,18 தேதிகளில் கணித ஆசிரியர்களுக்கும், டிச.18,19 தேதிகளில் இயற்பியல் ஆசிரியர்களுக்கும், ஆறாம் கட்டமாக டிச.19,20 தேதிகளில் கணித ஆசிரியர்களுக்கும் , டிச.20,21 தேதிகளில் இயற்பியல் ஆசிரியர்களுக்கும் பயிற்சி நடைபெறும். பயிற்சியில் கலந்து கொள்ளாத ஆசிரியர்களுக்கு டிச.21,22 ஆகிய தேதிகளில் பயிற்சி நடைபெறும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி