பள்ளியில் புகைப்பட வருகை பதிவு அமல்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 11, 2018

பள்ளியில் புகைப்பட வருகை பதிவு அமல்!



புகைப்படம் எடுத்து, மாணவர்களின் வருகையை பதிவு செய்யும் திட்டத்தை சென்னையில், அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.

பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவு முறையில், நவீன தொழில்நுட்பத்தை செயல்படுத்தும் வகையில் பெங்களூரைச் சேர்ந்த, ஐ.சி.இ.டி., என்ற நிறுவனம் ஆன்ட்ராய்டு செயலியை உருவாக்கியுள்ளது.

இதில் மாணவர்களை புகைப்படம் எடுத்து வருகை பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த திட்டம், சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்சோதனை முறையில் நேற்று அமலானது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், திட்டத்தை துவக்கி வைத்தார். வகுப்பில் உள்ள மாணவியரின் பெயர்களை வருகைபதிவேட்டில் எழுதி வாசிக்க வேண்டியதில்லை.

அலைபேசி வழியாக மாணவியரை புகைப்படம் எடுத்தால், அவர்களின் முகங்களை வைத்து, வருகை பதிவு பட்டியல் தயாராகும். இதற்காக மாணவியரை தனித்தனியே புகைப்படம் எடுத்து ஆன்ட்ராய்டு செயலியில் பதிவு செய்து வைத்துள்ளனர். இதில், போலி வருகை பதிவு செய்ய முடியாது என, அதிகாரிகள் கூறினர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி