ஜனவரி மாத இறுதிக்குள், ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, அனைத்து வகுப்பறைகளும், கம்ப்யூட்டர் மயமாக்கி, இன்டர்நெட் வசதி செய்யப்படும்'', என, அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே, கூகலூர் காந்தி கல்வி நிலையம் மேல்நிலைப்பள்ளி மற்றும் குருமந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த, பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள், 442 பேருக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அரசின் விலையில்லா சைக்கிள்களை நேற்று வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, அடுத்தாண்டு தனியாரை மிஞ்சும் அளவுக்கு, வண்ண சீருடைகளாக மாற்றி அமைக்கப்படும். ஒன்பது முதல், பிளஸ் 2 வரையுள்ள அனைத்து வகுப்பறைகளும், ஜனவரி மாத இறுதிக்குள் கம்ப்யூட்டர் மயமாக்கி, இன்டர்நெட் வசதி செய்யப்படும். ஆறு முதல், எட்டாம் வகுப்பு வரை, 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
But no fill it computer vaccuncy
ReplyDeleteகண்களுக்கு கெடுதல் ஐயா.
ReplyDeleteகம்ப்யூட்டர் மயம் அப்படி என்னா சார்
ReplyDelete