எம்ஜிஆரின் 102-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணயங்களை முதல்வர் கே.பழனிசாமி வெளியிட்டார்.
முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவன தலைவருமான எம்ஜிஆரின் 102-வது பிறந்த தினம் தமிழகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது.
தமிழக அரசு சார்பில் கிண்டியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மருத்துவபல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் பிறந்த தின விழா நடந்தது.காலை 11 மணிக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பல்கலைக்கழக வளாகத்துக்கு வந்தனர். அவர்களை, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், நிதித் துறை செயலர் கே.சண்முகம், பல்கலைக்கழக துணைவேந்தர் சுதா சேஷய்யன் ஆகியோர் வரவேற்றனர்.அங்குள்ள எம்ஜிஆர் சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது படத்துக்கு, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அதைத் தொடர்ந்து, எம்ஜிஆரின் உருவம் பொறிக்கப்பட்ட ரூ.100 மற்றும் ரூ.5 மதிப்புள்ள சிறப்பு நாணயங்களை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார். அதை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார். விழாவில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அதிமுக முக்கிய நிர்வாகிகள், அரசுத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி