பிளஸ் 1 பொது தேர்வு : பிழை திருத்த அவகாசம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 21, 2019

பிளஸ் 1 பொது தேர்வு : பிழை திருத்த அவகாசம்


பிளஸ் 1 பொது தேர்வு எழுத உள்ள மாணவர்களின், பெயர் விபரங்களின் பிழைகளை திருத்த, 23ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.

தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 1க்கான பொது தேர்வு, மார்ச், 6ல் துவங்குகிறது. இந்த தேர்வில், எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

மேலும், சில பாடங்களில் தேர்ச்சி பெறாத, 2018ம் ஆண்டு மாணவர்களும், பங்கேற்க உள்ளனர்.அனைத்து மாணவர்களுக்குமான பெயர் விபரங்கள், அந்தந்த பள்ளிகளில் பதிவு செய்து, தேர்வு துறைக்கு அனுப்பப் பட்டன. அவற்றில், சில மாணவர்களின் விபரங்களில் பிழைகள் கண்டறியப்பட்டன. மேலும், சில மாணவர்களின் விபரங்கள் விடுபட்டிருந்தன.இதையடுத்து, விடுபட்ட விபரங்கள் மற்றும் பிழையாக உள்ளவற்றை சரிசெய்ய, 23ம்தேதி வரை அவகாசம் அளித்து, தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது.

நாளை வரை, பள்ளி தலைமை ஆசிரியர்களும், 23ம் தேதி வரை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளும், விபரங்களை ஆன்லைனில் திருத்தலாம் என, தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி