நடுத்தர மக்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் விதமாக 5 லட்சம் ரூபாய் வரை வருமான வரிவிலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி தாக்கலாகும் இடைக்கால பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் அருண் ஜேட்லீ வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பை இரண்டரை லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தவும், மருத்துவம் மற்றும் போக்குவரத்து செலவுகளுக்கு வரிவிலக்கு அளிக்கவும் மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.
ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவான வருமானமுடையவர்கள் 10 சதவீதமும், 10 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள் 20 சதவீதமும் வருமான வரி செலுத்தி வருகிறார்கள். 10 லட்சம் ரூபாய்க்கு மேல் 30 சதவீத வருமான வரி விதிக்கப்பட்டுவருகிறது.
is it...
ReplyDeleteTrue aa
ReplyDelete