மாணவர்கள் 7,000 பேர் பரிதவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 18, 2019

மாணவர்கள் 7,000 பேர் பரிதவிப்பு


பாரதியார் பல்கலையில், பிரிவு,- 'பி' பிஎச்.டி., மாணவர்கள், 7,000 பேர், படிப்பை முடிக்க முடியாமல் பரிதவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

கோவை, பாரதியார் பல்கலையில், 2006ல் அறிமுகப்படுத்தப்பட்ட, பிரிவு-, 'பி' பிஎச்.டி.,யில், நாட்டின் எந்த கல்வி நிறுவனத்தில் இருக்கும் ஒரு பேராசிரியர், முகம் தெரியாத மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும். இதில், பல்வேறு முறைகேடுகள் அரங்கேறியதை தொடர்ந்து, 2015ல், தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், 2015ம் ஆண்டுக்கு முன், இப்பிரிவில், பிஎச்.டி.,யில் சேர்ந்த, 7,000 மாணவர்கள், தற்போது பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த, 2017 பிப்., 7ம் தேதி முதல், பிரிவு, 'பி' பிஎச்.டி., முடிக்கும் மாணவர்களுக்கு, 'தொலைதுார பகுதி நேர படிப்பு' என சான்றிதழ்களில் குறிப்பிடப்படுவதால், வேலைவாய்ப்பும் கிடைக்காத சூழல் எழுந்துள்ளது.

பல்கலை துணைவேந்தர் ஒருங்கிணைப்புகுழு உறுப்பினர் திருநாவுக்கரசு கூறியதாவது: பிரிவு,- 'பி' பிஎச்.டி., படிக்கும் மாணவர்களை, 'ரெகுலர்' பிரிவுக்கு மாறி படிக்க, வாய்ப்பு வழங்குவது குறித்து, கடந்த காலத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு கமிட்டி பரிந்துரை கொடுத்துள்ளது. இதை ஆய்வு செய்து, எதிர்வரும், 'சிண்டிகேட்' கூட்டத்தில், முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி