Attendance App - பள்ளியில் செல்போன் சிக்னல் கிடைக்காவிட்டால், எவ்வாறு வருகைப் பதிவு மேற்கொள்வது? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 10, 2019

Attendance App - பள்ளியில் செல்போன் சிக்னல் கிடைக்காவிட்டால், எவ்வாறு வருகைப் பதிவு மேற்கொள்வது?


கைபேசி செயலி மூலம் மாணவர் வருகைப் பதிவு செய்யும் போது, இணைய தள இணைப்புக்கான டவர் சிக்னல் கிடைக்கா விட்டால், அது பற்றி கவலைப்பட தேவையில்லை.

இதற்காக பள்ளியின் மேல் தளத்திற்கு ஏணி மூலம் ஏறிச் செல்ல வேண்டியதில்லை.

offline லேயே, பதிவு செய்யலாம்.

வருகைப் பதிவு விவரம், பதிவு செய்த இடம், நேரம் இவை அனைத்தும் மாணவர் வருகைப் பதிவு செயலியில் பதிவாகும்.

மொபைல் டேட்டாவை ஆன் செய்து வைத்திருந்தால், சிக்னல் கிடைக்கும் போது, offline ல் பதிவு செய்த விவரங்கள் அனைத்தும் தானாகவே ஆன்லைன் மூலம் பதிவேற்றமாகும்.

ஒரு வேளை பள்ளி செல்போன் சிக்னலே கிடைக்காத இடத்தில் அமைந்திருந்தால், பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து கூட , செயலியின் முகப்பு பக்கத்திற்கு சென்று, synchronize செய்து கொள்ளலாம். இதை இரவு 10 மணிக்குள் செய்து விட வேண்டும்.

அதன் பிறகு synchronize செய்தால், அன்றைய தகவல்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வாய்ப்பில்லை.

ஆகவே ஆசிரியர்கள், சிக்னல் கிடைக்கவில்லை என்றால், பயப்படவோ, அபாயகரமான கட்டிடங்களின் மீது ஏறி நின்றோ தங்கள் உயிரைப் பணயம் வைக்கத் தேவையில்லை.


கூடுதல் தகவல் வேண்டுமென்றால், வருகைப் பதிவு செயலியின், வலது புறத்தின் மேல் பகுதியில் உள்ள 3 கோடுகளை தொட்டால் பல்வேறு மெனுக்கள் வரும். இதில் help என்ற பகுதியை தொட்டால், Screen Shot மூலம் விளக்க சிலைடு வரும். சிலைடின் வலது புற கீழ்ப் பகுதியில் வலப்புற குறியிட்ட அம்புக் குறி வரும். இதை தொடர்ந்து அழுத்த, விளக்க சிலை கெள் வரிசையாக வரும். இதைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி