ஒரே இடத்தில் மூன்று ஆண்டிற்கும் மேல் பணி; அரசு அலுவலர்களின் விபரங்கள் சேகரிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 25, 2019

ஒரே இடத்தில் மூன்று ஆண்டிற்கும் மேல் பணி; அரசு அலுவலர்களின் விபரங்கள் சேகரிப்பு


மூன்று ஆண்டிற்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்களை துறை வாரியாக வேறு இடங்களுக்கு மாற்ற தேர்தல் கமிஷன் உத்தரவிட்டதை அடுத்து ,மாவட்டத்தில் அதற்கான ஆய்வுப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

லோக்சபா தேர்தலுக்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அதன்படி கலெக்டர்கள் ஓட்டு எண்ணிக்கை மையங்களை ஆய்வு செய்கின்றனர். வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்குமேல் பணிபுரிந்திருந்தால் அந்த அலுவலர்கள், பணியாளர்களை வேறு இடங்களுக்கு மாற்றி அதற்கான பட்டியலை மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க தேர்தல் கமிஷன் அறிவுறுத்தி உள்ளது. 'தேனி மாவட்டத்தில் தற்போது அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது,' என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துஉள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி