வனக் காப்பாளர் பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இடஒதுக்கீட்டின்படி பிரிவு வாரியாக தற்போது இந்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டு முடிவுகள் அடுத்த சில நாள்களில் வெளியிடப்படும் என்று தேர்வு வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. வனக்காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வு கடந்த மாதத்தில் நடைபெற்றது.
இத்தேர்விற்கான முடிவுகளும், அடுத்தகட்ட தேர்வு குறித்த தகவல்களும் தற்போது www.forests.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வஇணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இணையவழி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடற்தகுதித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் விரைவில் சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி