'எய்ம்ஸ்' நுழைவு தேர்வு பதிவுக்கு இன்றே கடைசி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 3, 2019

'எய்ம்ஸ்' நுழைவு தேர்வு பதிவுக்கு இன்றே கடைசி


'எய்ம்ஸ் நுழைவு தேர்வுக்கான, ஆன்லைன் அடிப்படை பதிவுக்கான நாள், இன்றே கடைசி. கால அவகாசம் நீட்டிக்கப்படாது' என, எய்ம்ஸ் நிர்வாகம் அறிவித்துஉள்ளது.

புதுடில்லி, ஜோத்பூர், பாட்னா, நாக்பூர் உட்பட, நாடு முழுவதும் உள்ள, 15 எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு, தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.நடப்பு கல்வி ஆண்டு மாணவர்களுக்கு, மே, 25, 26ல்எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு நடக்கிறது. ஏற்கனவே பிளஸ் 2 முடித்த மற்றும் தற்போது, பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள், இந்த தேர்வில் பங்கேற்கலாம்.தேர்வு எழுதும் மாணவர்கள், ஒவ்வொரு பாடத்திலும், தலா, 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெறுவது கட்டாயம். குறைந்தபட்ச மதிப்பெண்ணை பெறாவிட்டால், அவர்கள், நுழைவுத் தேர்வில் அதிக தேர்ச்சி பெற்றாலும், கவுன்சிலிங்கில் பங்கேற்க முடியாது.

இந்தாண்டு, நுழைவுத் தேர்வு எழுத விரும்புவோருக்கு, நவ., 30ல் ஆன்லைனில் அடிப்படை தகவல் பதிவு துவங்கியது. இன்று மாலை, 5:00 மணிக்குள் பதிவுகளை முடிக்க வேண்டும். பதிவு செய்பவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதா என்ற விபரம், வரும், 7ம் தேதி தெரிய வரும்.அடிப்படைபதிவுக்கு, கூடுதலாக தேவைப்படும் விபரங்களை பதிவு செய்ய, வரும், 8ம் தேதி முதல், 18ம் தேதி வரை அவகாசம் தரப்படும்.

இறுதி செய்யப்பட்ட மாணவர்களின் விபரம், வரும், 22ல் வெளியாகும். நுழைவுத் தேர்வுக்கான தகவல் கையேடு, வரும், 29ம் தேதி வெளியிடப்படும்.தேர்வுக்கான கட்டணம் செலுத்துவது; தேர்வு மையங்களுக்கான விருப்பம் தெரிவிக்கும் பதிவு, வரும், 29ம் தேதி முதல், பிப்., 17 மாலை, 5:00 மணி வரை நடக்கும். தேர்வுக்கான ஹால் டிக்கெட், மே, 15ல் வெளியிடப்படும் என, எய்ம்ஸ் நுழைவு தேர்வு கமிட்டி அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி