'மொபைல் ஆப்' பதிவு பள்ளிகளில் கட்டாயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2019

'மொபைல் ஆப்' பதிவு பள்ளிகளில் கட்டாயம்


அனைத்து அரசு பள்ளிகளிலும், 'மொபைல் ஆப்' வாயிலாக, வருகை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.தமிழக அரசு பள்ளிகளில், ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.

பெரும் பாலான மாணவர்கள், தனியார் பள்ளிகளில் படிக்கவே விரும்புகின்றனர். அரசு பள்ளிகளில், கற்றல் குறைபாடு, உள்கட்டமைப்பு வசதி குறைவு, ஆங்கில வழி கல்வி மீதான மோகம் என, பல்வேறு காரணங்களால்,மாணவர்எண்ணிக்கை சரிகிறது.அதனால், பல பள்ளிகளை மூடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.800க்கும் மேற்பட்ட பள்ளிகளில், தலா, ஒரு மாணவர் இல்லாத நிலை உள்ளது. 2,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில், தலா, 10க்கும் குறைவான எண்ணிக்கையில் தான் மாணவர்கள் உள்ளனர்.இது போன்ற நிலையால், அரசு தொடக்கப் பள்ளிகள் எதிர்காலத்தில் இருக்குமா என, கேள்வி எழுந்துள்ளது.ஆனால், ஆசிரியர்களின் பணியிடங்களை காப்பாற்றும் வகையிலும், நலத் திட்ட உதவிகளுக்கா கவும், பல அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கையை போலியாகக் காட்டுவது தெரிய வந்து உள்ளது.இந்நிலையில், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையிலும், தினமும் மாணவர்கள் வருவதை தெரிந்து கொள்ளும் வகையிலும், வருகை பதிவுக்கு, 'மொபைல் ஆப்' என்றசெயலியை, ஒருங்கிணைந்த கல்வித் திட்டஅதிகாரிகள் அறிமுகம் செய்துள்ளனர்.

இது குறித்து, ஒருங்கிணைந்த கல்வித் திட்ட அலுவலகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'இந்த மொபைல் ஆப் வாயிலாக, ஒவ்வொரு நாளும் பாடவேளை வாரியாக, மாணவர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும். இதை, வட்டார வள அதிகாரிகள் மற்றும் இயக்குனரக அதிகாரிகள் கண்காணிப்பர்' என, கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி