செய்முறை தேர்வுக்கு முன் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2019

செய்முறை தேர்வுக்கு முன் பள்ளிகளில் சிறப்பு பயிற்சி


செய்முறை தேர்வுக்கு முன், மாணவர்களுக்கு முறையான பயிற்சி வழங்க வேண்டும்' என, முதுநிலை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

பத்தாம் வகுப்பு முதல் பிளஸ், 2 வரை, மார்ச்சில், பொதுத் தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வுகளில், 25 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.


மாநிலம் முழுவதும், 3,000 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.பொதுத் தேர்வுக்கு முன், அறிவியல் மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு, பிப்., 1 முதல், 12க்குள், செய்முறை தேர்வை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.


 இதுதொடர்பான, தேர்வுத் துறை உத்தரவு:


செய்முறை தேர்வை பெயரளவில் நடத்தாமல், வேறு பள்ளி ஆசிரியரை நியமித்து, மாணவர்களின் திறனை மதிப்பிட வேண்டும். எழுத்து தேர்விலும், உரிய பதில்கள் இருந்தால் மட்டுமே, மதிப்பெண் வழங்க வேண்டும்.

 செய்முறை தேர்வுக்கான நோட்டு புத்தகங்கள், திடீர் ஆய்வு செய்யப்பட வேண்டும். இத்தேர்வை, எழுத, முன்கூட்டியே பயிற்சி வகுப்புகளை, முதுநிலை ஆசிரியர்கள் நடத்த வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி