அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஆதரவாக மாவட்டத் தலைநகரங்களில் வியாழக்கிழமை (ஜன.31) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், சிபிஐ (எம்-எல்) செயலாளர் எஸ். குமாரசாமி, எஸ்.யு.சி.ஐ.(சி) செயலாளர் ஏ. ரெங்கசாமி ஆகியோர் கூட்டாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை அழைத்துப் பேச தமிழக அரசு மறுத்து வருவது அநீதியானது. போராட்டக்காரர்கள் மீது அடக்குமுறை நடவடிக்கைளை அரசு எடுத்து வருகிறது. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்வதோடு, அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளையும் திரும்பப் பெறவேண்டும். மேலும் அவர்களை அழைத்துப் பேச வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இடதுசாரி கட்சிகள் சார்பில் வருகிற வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி