வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு ( முழு விவரம் ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2019

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க உத்தரவு ( முழு விவரம் )

16 comments:

  1. Replies
    1. பகுதி நேரம் தொகுப்பூதியம் என்ற வார்த்தைகள் வேலை நியமன தடை சட்டம் என்ற இளைஞர்களின் படித்தவர்களின் வாழ்க்கையை கெடுக்கக் கூடிய விஷயங்கள் எல்லாமே இவர்களின் ஆட்சியில் மட்டுமே நடைபெறும். 7000, 7700 சம்பளம் வாங்கி வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் ஆயிரக்கணக்கானோர் நொந்து போய் உள்ளனர். இன்னும் ஒருபடி மேலே சென்று இப்போது பணி இடங்களை குறைத்துக்கொண்டு இருக்கிறார்கள். போராட வேண்டிய இளைஞர்கள் அமைதியாக கூட இல்லாமல் போராடுபவர்களுக்கு எதிராக கருத்து கூறுகிறார்கள். டேட் தேர்வு தேர்ச்சி பெற்று ஆறு வருடங்கள் ஆகிறது. இன்னும் போஸ்டிங்??????? அதுவும் ஏழு ஆண்டுகள் முடிந்து விடும். திரும்பவும் போட்டி போட முடியமா? யார் கேட்பது? இப்படி தவறு செய்யும் அரசியல் வியாதிகளை விட்டுட்டீங்க. நமக்ககக yeppo poraadugiraargal intha இளைஞர்கள். Kettaal nithi patraakurai. Ellaa varigalum enge pogirathu?

      Delete
  2. அதுவும் காலியாக உள்ளதே

    ReplyDelete
  3. Ha ha ha niga thalaigila ninu thannikudichalum orutha varamata yena 7000 salary la police and nurse 7700 salary la part time techers ivangalam Ava kanumunadi vandhupogum la😂😂😂😂😂

    ReplyDelete
  4. yen ithuku cal for vitu permanent posting pota..ena? onum venam 2017 pgtrb back log vacancy 1060 plus current vacancy 3000 a pgt 2017 la minimum marks a cancel panitu candidade edutha marks a vachu udanea fill panuna students eathuka matangala..? yarum serathinga pa..sernthingana apuram job vaangirathu kastamthan..apadiyea kidachalum intha 7500 than 6 maatham kalichu comission poga kidaikum..apuram neengalum jacto-jio maathri poratam pana vendiyathuthan..7500 la sernthingana cal for varathu..

    ReplyDelete
  5. Avoid this job bcz next nammakkum idhe nilamaithan namma virala vechu namma kannaye kutha pakuranga be careful

    ReplyDelete
  6. அவங்க வேலைய நிறுத்துனாஶநம்ம வேலைய,தொடங்குவோம். இப்படிக்கு 2013,2017 டெட் தேர்ச்ச்சி ஆசிரியகள்.

    ReplyDelete
    Replies
    1. வேலையில்லாத டெட்ஆசிரியர்கள் யில் சேருங்கள்

      Delete
  7. பொதுமக்களுக்கு ஜாக்டோ ஜியோ வின் அன்பான வேண்டுகோள்.
    தங்களுக்கு மகனோ, மகளோ, பேரனோ அல்லது பேத்தியோ இருந்தால் கட்டாயம் இதை முழுமையாக படியுங்கள்.

    தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் போராட்டம் சம்பள உயர்வுக்காக அல்ல எங்களின் 21 மாத சம்பள பாக்கியை கொடுக்க வேண்டும் என்பதற்காக.

    நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எடுத்து யாராவது குதிரை பந்தயத்தில் கட்டி(Share Market), வந்தால் லாபம் போனால் நட்டம் என்று சொன்னால் உங்களுக்கு கோபம் வருமா? வராதா?.

    எங்களுக்கு கோபம் வருகிறது அதனால்தான் புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்க்கிறோம்.

    உங்களின் மகனோ ,மகளோ, பேரனோ அல்லது பேத்தியோ படித்துக் கொண்டிருந்தால் அல்லது படித்து முடித்திருந்தால் அவர்களுக்கு அரசு வேலை கிடைக்க வேண்டாமா?

    இது எங்களுக்கான போராட்டம் மட்டுமல்ல நம் எதிர்காலச் சமுதாயத்தின் நலனுக்கான போராட்டம்.
    தற்பொழுது 3500 சத்துணவு மையங்களை இணைக்க உள்ளார்கள் இதனால் 7000 பணியிடம் காணாமல் போகும், 3000 தொடக்கப் பள்ளிகளை அருகில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் உடன் இணைக்க உள்ளார்கள் இதனால் 6000 பணியிடம் காணாமல் போகும், இதைப் போன்று ஒவ்வொரு துறைகளிலும் பணியிடங்களை இணைகிறார்கள் இதனால் லட்சக்கணக்கான பணியிடங்கள் காணாமல் போகும் பிறகு எப்படி உங்கள் வாரிசுகளுக்கு வேலை கிடைக்கும்.

    நீங்கள் இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு உங்கள் வாரிசுகளை படிக்க வைப்பது அவர்கள் படித்து ஒரு நல்ல அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் அந்த வேலையே இல்லாத போது அவர்கள் எப்படி அந்த வேலைக்கு செல்ல முடியும்?

    சிந்தியுங்கள் இனியும் நீங்கள் முட்டாளாக இருந்து விட்டால் நாளை அரசு பணியிடம் என்பதே இல்லாமல் போகும் உடனே ஜாக்டோ ஜியோ வின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுங்கள். நாங்கள் ஒன்றும் மந்திரிகள் அல்ல நாள்தோறும் ஒரு பொய்யைச் சொல்ல, நன்கு படித்த ஆசிரியப் பெருமக்கள்.

    உண்மையைச் சொல்லி விட்டோம் இனி ஆதரவு தருவதும் தராமல் இருப்பதும் உங்கள் விருப்பமே.

    ReplyDelete
  8. ஆசிரியர் & அரசு ஊழியர் போராட்டம் ஏன்? நண்பர்களே இப்போராட்டம் சம்பள உயர்வுக்கானது என்பதே தவறான புரிதல். இது எங்களின் அடிப்படை உரிமை பற்றியதாகும் ...நோக்கம் : 1 வெள்ளையர்கள் ஆட்சியில் இருந்து அளிக்கப்பட்டு வந்த ஓய்வு ஊதியம் தற்போதைய கொள்ளையர்களால் புதிய பென்ஷன் திட்டம் என்ற பெயரால் பறிக்கப்பட்டது.புதிய பென்ஷன் என்றால் என்ன? எங்களின் ஊதியத்தில் 10% பிடித்தம் செய்து மாநில அரசு மத்திய அரசிடம் அளிக்க வேண்டும். அப்பணத்தை ஊழியர் ஓய்வு பெறும் போது மொத்த தொகையில் 40% ரொக்கமாகவும் மீதி 60% பங்குசந்தையில் முதலீடு செய்து அதில் வரும் இலாபத்தை ஓய்வு ஊதியமாக அளிக்க வேண்டும். நிலையில்லாத பங்குச்சந்தையில் வயதான காலத்தில் எங்களின் பணத்தை பங்குச்சந்தையிலும் எங்கள் வயிற்றில் மண்ணை போடுவது நியாயம் தானா? சரிபோகட்டும் பிடித்தம் செய்த பணத்தை மாநில அரசு மத்திய அரசிடம் செலுத்தியதா என்றால் அதுவும் இல்லை.தற்செயலாக இறந்த ஊழியர்கள் குடும்த்தினர். பிடித்தம் செய்த பணத்தில் ஒரு ரூபாயும் வாங்க வழியில்லை.காரணம் எங்கள் பணம் அரசு ஏப்பம் விட்டுவிட்டதே ஆகும். சேமிப்பாக செலுத்திய தொகையை வாங்க வழியில்லை என்றால்? நீங்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்ம இருப்பீர்களா...எனவே எங்கள் பணத்திற்கு பாதுகாப்பு பழைய பென்ஷன் திட்டமே எனவே அதை வலியுறுத்துகிறோம். மேலும் அரசுபள்ளிகள் சீரழிய அரசே காரணம். கடந்த காலங்களை காட்டிலும் தற்போது அரசுபள்ளிகளில் பலகட்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற திறமையான ஆசிரியர்கள் உள்ளனர்.ஆனால் மாணவர்கள்? போக்கிரி போல செயல்படுகின்றனர்.ஆசிரியரை கண்டு மாணவன் அஞ்சிய காலம் போய் மாணவனை கண்டு ஆசிரியர் அஞ்சவேண்டிய நிலைக்கு யார் காரணம்? கண்டிக்க கூடாது, தண்டிக்ககூடாது. என்றால் மாணவனை எவ்வாறு சீர்படுத்துவது நீங்கள் செல்லலாம்.அன்பாக என்று அது சில நேரம், சில மாணவர்களுக்கு பொருந்தும்.என் பிள்ளைகளை ஒரு அரசுபள்ளியில் சேர்ப்பதற்க்கு தயார்.ஆனால் அவன் ஒழுக்கமான சூழலுக்கு யார் பொறுப்பு ஒரே சட்டம் அரசுஊதியம் பெறும்MP,MLA, கலெக்டர் உட்பட அனைவரின் பிள்ளைகளும் அரசுபள்ளியில் பயில வேண்டும் என்று சும்மா அல்ல நியாயமான கட்டணத்துடன்.இந்த சட்டம் கொண்டுவர உங்க முதல்வருக்கு தில்லு இருந்த சொல்லு(உங்கள் M.P MLA-க்கள் மட்டும் பழைய பென்ஷன் பெறுகின்றனனர்) வியாபாரியோ கடைசி வியாபாரி. ஆனால் எங்களுக்கு 58 வயதிற்க்கு பின் வசந்தபவன் ஒட்டலிலும் வேலை தரமாட்டான்.உங்கள் வரிபணம் என்றீர்கள்.அரசியல்வாதிகளை விடவும், வியாபாரிகளைவிடவும் நேர்மையாக அரசிற்கு வரிசெலுத்தும் ஒரே இனம் அது ஆசிரிய&அரசுஊழிய இனமே.இவற்றை எல்லாம் பாமரமக்களுக்கு விளக்க வேண்டிய நிலையில் நாங்கள் ..காரணம் அரசும், மீடியாவும் எங்கள் கோரிக்கையை தவறாக சம்பள உயர்வு கேட்கின்றனர் என சித்தரிக்கின்றன. இப்பதிவில் தவறு இருந்தால் சொல்லுங்கள் தோழர்களே.

    ReplyDelete
  9. *புரிதலற்ற பதிவுகளால் அரசு ஊழியர் போராட்டத்தை கொச்சைப் படுத்துபவர்களுக்கு*

    தமிழனைப் பொறுத்தவரை திடீர் சம்பவ கொந்தளிப்பாளராகவே வாழ்கிறான்

    அரசு ஊழியன் என்பவன் பணியாளன் அவ்வளவே நாட்டில் நடக்குற அத்துணை அநீதிகளுக்கும் அவனே காரணமல்ல

    வரும்போது ஒரு பேச்சு இப்ப ஒரு பேச்சு?
    அவன தூக்குங்க ஆயிரம்பேரு இருக்கானு பொங்குறவன்
    ஒன்னு வேல கெடக்காதவனா இருப்பான்
    இல்ல
    வேலைக்கு லாயக்கு இல்லாதவனா இருப்பான்.
    இல்ல
    அடுத்தவன் ஆக்கி வச்ச சோற நோகாம திங்க வாய ரெடிபன்னி வச்சவனா இருப்பான்?

    இன்று அவர்கள் பெறுகிற 5 இலக்க ஊதியம்
    அப்பாயின்மெண்ட் ஆர்டர் அடிச்சதுமே வாங்குனது இல்ல

    பத்து பதினைந்து வருட உழைப்பின் பலன் so கொச்சயான வார்த்தைகள் வேணாம்.

    அதோடு நில்லாது அவர்களின் நியாயமான ஊதிய முரண் ஊதிய உயர்வு சம வேலை சம ஊதியம்
    இறுதியாக நாளதுவரை வாழ்வாதாரமாக நினைத்து வரும் ஓய்வூதியம்

    இதை முன் வைத்தே போராட்டம்

    இந்த கோரிக்கைகளோடு போராட்டம் தொடங்கியது 2017ல்
    இன்று 2019 செய்றேன் செய்றன்னு சொம்படிச்சி கரிபூசுன அரசின் ஏமாற்று வேலைக்கு அவர்கள் எடுத்துள்ள இறுதி ஆயுதம் இப்போராட்டம்.

    Cps எனும் திட்டத்தில் வசூல் செய்த 35000 கோடிக்கு அரசிடம் இதுவரை முறையான கணக்கில்லை

    சில சொட்டபஞ்சாயத்து போன்ற அமைப்புகளும் திடீர் ஞானோதய புரட்சியாளர்களும் அரசு ஊழியரை ஆசிரியரை கொச்சைப்படுத்துகின்றனர்.

    அரசு கல்வி மருத்துவம் இவைகளை இலவசமாக தரனும் தனியார்மயம் இருக்க கூடாதுனு வரிகட்ற பொதுஜனம் ஏன் இன்னுங்கூட சிந்திக்கல??
    தனியார்பள்ளிய மூட ஒன்றாக சேர்ந்து போராடலாமே?

    ஒரு எம்எல்ஏ எலெக்சன்ல நின்னார்.
    ரிடல்ட் வர்ரதுக்குள்ள அவருடைய உடல் நிலை பாதிக்கப்படுகிறது. ரிசல்ட்டு வருது அவரு ஜெய்க்கிறார். ஆனா அவர் உயிரோட இல்ல. ஆனா ஜெய்ச்ச ஒரே காரணத்துக்காக அவருடைய குடும்பத்துக்கு ஓய்வூதியம்...
    ஆனா 20 வருசம் வேலபாக்குற வாத்தியார் சாக்பீஸ் கரையோட கம்முனு போயிரனும் அதானே?

    நீதியரசர் எம்எல்ஏ னு எல்லாரும் 21 மாத ஊதிய நிலுவைய ரொக்கமா வாங்குனாங்க
    ஒத்த பைசா வாங்காம அதாவனு அவங்களுக்கு போட்ட பட்ட நாமத்த எதிர்த்து போராடுனா
    வரிபணம் வீண் ?
    என்னே ஒரு சிந்தை..

    களைகள் நிறைய இருக்கு அதை அறிவால் களையுங்கள் பொதுமக்களே

    லஞ்சம் வாங்குறவன செருப்பால அடி
    சட்டைய புடிச்சி உலுக்கு
    ஒருங்கா வேலபாக்குலனா படம்புடிச்சி உலகத்துக்கு காட்டு

    அத விட்டுட்டு அவன் வேலய நீ வாங்க ஆசப்படாத..

    போராட்டமின்றி விடுதலை கூட கிடைத்ததில்லை

    இதுவே உங்கள் அக்கறை மிகுந்த அய்யத்திற்கு விடை


    *வெல்வோம் இணைந்து*🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    ReplyDelete
  10. தம்பி நீ என்ன பேசினாலும் உன் சம்பளம் அளவுக்கு அதிகம்தான்

    ReplyDelete
  11. இத்தனை வருசமா டெட் பாஸ் பண்ணவங்கள கண்ணுக்கு தெரியல. இப்போதான் தெரியுதோ? எவ்வளவு கஷ்டப்பட்டு படிச்சோம். எங்களுக்கு 7 வருசம் முடியப்போகுது. மறுபடியும் நாங்க படிச்சு வந்து வெயிட் பண்ணனும். இது தான் பொலப்பாட? நீ வரி எல்லா வகையிலயும் வசூலிச்சுட்டு அந்த வரி யில விழா கொண்டாடுறதும் போஸ்டிங் எல்லாம் தற்காலிகமா போட்டு நிதி பற்றாக்குறை ன்னு சொல்லிட்டு கோடி கோடி ன்னு அங்கங்க பிடி படுறதும் தமிழ்நாடு தலையெழுத்தையும் இளைஞர்களின் தலையெழுத்தையும் கெடுக்குறீங்க....

    ReplyDelete
  12. போராட்டம் தொடரட்டும் வாழ்த்துக்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி