அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையில் ஆசிரியர்கள் வருகை பதிவுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி [ வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம் ] - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2019

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறையில் ஆசிரியர்கள் வருகை பதிவுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி [ வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10,000 அபராதம் ]

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவுக்கு பயோ மெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை அமல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின்போது அறிவித்தார். இதையடுத்து கடந்த நவம்பர் மாதத்தில் இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.

அதில், தமிழகத்தில் 3,688 உயர்நிலைப் பள்ளிகள், 4,040 மேல்நிலைப் பள்ளிகள் என 7,728 பள்ளிகளில் ரூ.15.30 கோடி செலவில் பயோ மெட்ரிக் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து சென்னையிலும், பெரம்பலூரிலும் தலா ஒரு பள்ளிகளில் இந்தத் திட்டம் சோதனை அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் இரண்டு பள்ளிகளில் இந்தத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர் மற்றும் ஆசிரியர்கள் வருகை பதிவுக்கு பயோ மெட்ரிக் முறையை அறிமுகப்படுத்த தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் கல்வி அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நல்ல திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என கூறிய நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும் வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

4 comments:

  1. தப்பு, எல்லா அரசு அலுவலகங்களிலும் பயே மெடரிக் வைக்க வழக்கு தாக்கல் செய்து இருக்க வேண்டும்.

    ReplyDelete
  2. பள்ளிகளை தவிர மற்ற அரசு அலுவலகங்களில் நேரம் அதிகம்.

    ReplyDelete
  3. மற்ற அரசு ஊழியர்களுக்கு மாணவர்கள் என்ற கேடயம் கிடையாது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி