2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்புகள் ( update 1:15 PM ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2019

2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்புகள் ( update 1:15 PM )

2019-20-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை பொறுப்பு நிதியமைச்சரான பியூஷ் கோயல் தாக்கல் செய்தார்.

2019-20-ம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்புகள்

* 2022-ம் ஆண்டிற்குள் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு

* இதுவரை எந்த ஆட்சிக்காலத்திலும் இல்லாத வகையில் 5 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி

* பொருளாதாரத்தில் வேகமாக முன்னேறி வரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று

* உலகின் மிகப்பெரும் பொருளாதார நாடுகளில் 6-வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்

* நிதிப்பற்றாக்குறை 3.4 சதவீதமாக குறைப்பு

* ஜி.எஸ்.டி. அறிமுகத்தால் வரி விதிப்பு எளிதாக்கப்பட்டு உள்ளது

* உற்பத்தி மதிப்பில் 5.6% ஆக இருந்த நடப்பு கணக்கு பற்றாக்குறை 2.5 % ஆக குறைப்பு

* வங்கித்துறையில் சீர்திருத்த நடவடிக்கையால் வாராக்கடன் குறைந்துள்ளது

* ரியல் எஸ்டேட்டில் சீர்திருத்த சட்டம் நிறைவேற்றியதால் வெளிப்படை தன்மை

* 5 லட்சம் கிராமங்களில் கழிவறைகள் அமைத்து சுகாதாரத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது

* வங்கிகளின் வாராக்கடன் ரூ.3 லட்சம் கோடி மீட்பு

* உயர்சாதி ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு

* 23,900 கோடி டாலர் அன்னிய முதலீட்டை ஈர்த்துள்ளது இந்தியா

* ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு

* கிராம சாலைகள் அமைக்கும் திட்டம் 3 மடங்காக உயர்வு

* கிரமபுற சாலைகள் அமைக்க ரூ.19,000 கோடி ஒதுக்கீடு

* 50 கோடி மக்களுக்கு மருத்துவ காப்பீடு வசதி அறிமுகம்

* கடந்த 4 ஆண்டுகளில் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 1.53 லட்சம் விடுகள் கட்டுப்பட்டுள்ளன

* 22-வது எய்ம்ஸ் மருத்துவமனை அரியானாவில் அமைய உள்ளது

* சிறிய விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6000 வழங்கும் சிறப்பு திட்டம்

* ரூ.6,000 உதவி திட்டம் மூலம் ரூ.12 கோடி விவசாய குடும்பங்கள் பயன் பெறும்

* சிறிய விவசாயிகளுக்கு உதவ ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்படும்

* நேரடி வருமான உதவி திட்டம் செயல்ப்படுத்தப்படும்

* கால்நடை வளர்ப்பு மற்றும் மீனவர் நலனுக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு

* 22 விளைபொருட்களின் ஆதார விலை 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது

* இயற்கை பேரழிவால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு 2 சதவீத வட்டி மானியம்

* பொருளாதார வளர்ச்சியால் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன

* அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.3,000 பென்சன் வழங்க நடவடிக்கை

* ஓய்வூதிய நிதிக்கு தொழிலாளர் செலுத்தும் தொகைக்கு ஈடாக அரசு செலுத்தும்

* ஓய்வூதிய திட்டம் மூலம் 10 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவர்

* 1 கோடி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

* இந்தியாவில் மின்சாரம் இல்லாத வீடுகளே இல்லாத நிலை வரும் மார்ச் மாதத்திற்குள் உருவாகும்

* மீனவர்களின் நலனுக்காக மீன்வளத்துறை என்ற தனி அமைச்சகம் உருவாக்கப்படும்

* இந்திய பொருளாதாரத்தில் 6.3 சதவீத பங்களிப்பு மீன்வளத்துறை அளித்து வருகிறது

* சிறு, குறுந்தொழில் முனைவோருக்கு 59 நிமிடத்தில் ரூ.1 கோடி கடன் வழங்க நடவடிக்கை

* பாதுகாப்புத்துறைக்கு ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு

* அகல ரயில் பாதையில் இருந்த ஆளில்லா ரயில்வே கேட் அகற்றப்பட்டுவிட்டன

* இணையதள பயன்பாடு 50 மடங்கு அதிகரிப்பு

* அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் கிராமங்கள் டிஜிட்டல் மயமாக்கப்படும்

* திருட்டு விசிடியை ஒழிக்க புதிய சட்டம் இயற்றப்படும்

* திரைப்பட தயாரிப்புக்கு ஒற்றைச்சாளர முறையில் அனுமதி வழங்கப்படும்

* கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க பெட்ரோல் கிணறுகள் அதிகரிக்கப்படும்

* ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும்

* வருமான வரி வசூல் ரூ.12 லட்சம் கோடியாக அதிகரிப்பு

* வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு ரூ.58,166 கோடியாக உயர்வு

* வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு

* ஜன்தன் திட்டத்தின் கீழ் 34 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன

* கறுப்பு பணத்தை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது

* 3.38 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டுபிடிப்பு

* ஜி.எஸ்.டி வரி தாக்கல் ஆன்லைன் மூலம் மேற்கொள்வது மேலும் எளிதாக்கப்படும்

* அடுத்த 5 ஆண்டில் ரூ.5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் கொண்ட நாடாக இலக்கு

* 2019 இடைக்கால பட்ஜெட் : தனிநபர் வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ.2.5 லட்த்தில் இருந்து ரூ.5 லட்சமாக அதிகரிப்பு

* பேட்டரி கார்களை இந்தியாவில் தயாரிக்க முன்னுரிமை வழங்கப்படும்

* 2030-ம் ஆண்டில் உலகிலேயே பேட்டரி கார் அதிகம் தயாரிக்க நடவடிக்கை

* 2030-க்குள் அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை

* அடுத்த ஆண்டில் நிதிப்பற்றாக்குறை 3.1%-க்கு கீழ் குறைக்க நடவடிக்கை

* பேட்டரி கார்களை இந்தியாவில் தயாரிக்க முன்னுரிமை வழங்கப்படும்

* 2030-ம் ஆண்டில் உலகிலேயே பேட்டரி கார் அதிகம் தயாரிக்க நடவடிக்கை

* 2030-க்குள் அனைத்து மக்களுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை

* வேலை தேடுபவர்கள் எல்லாம் வேலை கொடுப்போராக மாறியுள்ளனர்

* வீட்டுக்கடனுக்கான வட்டி சலுகை இனி 2 வீடுகளுக்கு வழங்கப்படும்

* 2022-க்குள் விண்வெளியில் இந்தியா தடம் பதிக்கும்

* இந்தியாவில் மொபைல் டேட்டா பயன்பாடு 15 மடங்கு அதிகரித்துள்ளது

* செல்போன் உதிரிபாக உற்பத்தி அதிகரித்ததன் மூலம் வேலைவாய்ப்பும் உயர்ந்துள்ளது

மக்களவை ஒத்திவைப்பு

2019-ம் ஆண்டு இடைக்கால பட்ஜெட் உறை நிறைவடைந்ததை அடுத்து மக்களவையை சுமித்ரா மகாஜன் ஒத்திவைத்தார்.

5 comments:

  1. சிறிய விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 6000 கொடுப்பது போல நிலமே இல்லாத விவசாயக் கூலி வேலை பார்க்கும் மக்களுக்கு 6000 ரூபாய் கொடுத்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  2. சேற்றில் கால் வைத்து விவசாயம் செய்யும் விவசாயக் கூலி தான் உண்மையான விவசாயி எனவே இந்த விவசாயக்கூலிகள் பயன்பெறும் வகையில் ஏதேனும் அறிவிப்புகள் சலுகைகள் வந்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  3. மாற்றுதிறனாளிகளுக்கு பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கின்றது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி