5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வருமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 13, 2019

5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வருமா?


ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்துவது குறித்து, அமைச்சரவை கூடி முடிவு செய்யும்,'' என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:

மனிதநேய ஜனநாயக கட்சி - தமிமுன் அன்சாரி: முத்துராமலிங்க தேவர் வரலாற்றை, ஏழாம் வகுப்பு பாடத்திட்டத்தில் சேர்த்துள்ளதாகவும், அதில், 'முத்துராமலிங்கம்' என, குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர் செங்கோட்டையன்: இது, தவறான செய்தி. அதுபோன்று புத்தகம் வெளியிடப்படவில்லை. அவ்வாறு புத்தகம் வெளியிடப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிமுன் அன்சாரி: நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த, ஏழு மீனவர்கள், நம் எல்லையில்மீன்பிடித்த போது, இலங்கை கடற்படையினர், கைது செய்துள்ளனர். அவர்களை விடுவிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர் ஜெயகுமார்: வெளியுறவு அமைச்சகத்திடம் பேசி, அவர்களை விடுவிக்க, நடவடிக்கை எடுத்துஉள்ளோம். இலங்கை சிறையில், 20 மீனவர்கள் உள்ளனர். அனைவரையும் விடுவிக்க, முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளில், 587 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

தமிமுன் அன்சாரி: ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு வர உள்ளதாக தகவல். அவ்வாறு நடத்தப்பட்டால், கிராம மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

அமைச்சர் செங்கோட்டையன்: இது தொடர்பாக, மாநில அரசே முடிவு செய்யலாம் என, மத்திய அரசுஅறிவித்துள்ளது. தமிழக அரசு, எந்த முடிவும் எடுக்கவில்லை.

தி.மு.க., - தங்கம் தென்னரசு: எதிர்காலத்தில், அரசின் முடிவு என்ன?அமைச்சர் செங்கோட்டையன்: முதல்வர் மற்றும் துணைமுதல்வரை ஆலோசித்து, அமைச்சரவை கூட்டத்தில், முடிவு எடுக்கப்படும். இப்போது சொல்ல முடியாது.இவ்வாறு, விவாதம் நடந்தது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி