கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? ( சிறப்புக் கட்டுரை) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2019

கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? ( சிறப்புக் கட்டுரை)



தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள புதிய அரசாணை முதுகலை பட்டம் பயின்ற கணினி ஆசிரியர்களிடம் வரவேற்பை பெற்ற போதிலும் 40,000கணினி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் இதுவரை 54,000 கணினி ஆசிரியர்கள் பி.எட் பட்டம் பெற்றுள்ளனர். இதில் 40000த்திற்கும் மேற்பட்டோர் இளங்களை பட்டத்துடன் பி.எட் பட்டம் பெற்றவர்கள். மீதமுள்ள 10000க்கும் மேற்பட்டோர் முதுகலை பட்டத்துடன் பி.எட் பட்டம் பெற்றவர்கள். இந்நிலையில், புதிய அரசாணையில் கணினி ஆசிரியர்களின் கல்வித்தகுதி மாற்றப்பட்டுள்ளது. மற்ற பாடங்களை கற்பிக்கும் அதே கல்வித் தகுதி கொண்ட ஆசிரியர்களை முதுகலை ஆசிரியர்கள் என்றும், கணினி பாடப்பிரிவில் முதுகலை படிப்புடன் பி.எட் பட்டம் பெற்றாலும் பயிற்றுனர் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் தான் கணினி அறிவியல் பாடம் நடைமுறையில் உள்ளது. என்சிஇஆர்டி விதியின் படி தனிப் பாடமாக தமிழகத்தில் கணினி பாடம் முதல் வகுப்பிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவில்லை.
புதிய பாடத்திட்டத்தில் 6 மற்றும் 9ம் வகுப்பில் மத்திய அரசின் நிதிக்காக கணினி என்ற பாடம் பெயரளவில் மட்டும் மூன்று பக்கங்களை அறிவியல் பாடத்துடன் இணைத்துள்ளது.

இதனை முறையாக செயல்படுத்தியிருந்தால் இளங்கலை படித்த அனைத்து ஆசிரியர்களும் பயன்பெறுவர்.2011ம் கல்வியாண்டில் தமிழகத்தில் கணினி அறிவியல் பாடம் 6ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியாக கொண்டுவரப்பட்டது; அதற்காக புத்தகங்களும் பல கோடி செலவில் அச்சடிக்கப்பட்டது; ஆனால் இதுவரை மாணவர்களுக்கு வழங்காமல் குப்பைக் கழிவாக மற்றப்பட்டுள்ளது. மேலும் கணினி கல்விக்காக 2011-12ம் ஆண்டு மத்திய அரசு ரூ. 900 கோடி நிதி வழங்கிய போதிலும் கடந்த 8வருடங்களாக நிதியை பயன்படுத்தாமல் நல்ல திட்டத்தை அரசு இன்று வரை கிடப்பில் போட்டுள்ளது.

இந்நிலையில், புதிய அரசாணையால் இளங்கலை பட்டத்துடன் பி.எட் படித்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வோ, பதிவு மூப்போ எதிலும் கலந்து கொள்ள இயலாத நிலை உருவாகியுள்ளது. 2014ம் ஆண்டில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி இளங்கலை பட்டத்துடன் கணினி பாடத்தில் பி.எட் பட்டம் பெற்றவர்களை பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது யுஜிசி அறிவிப்பால் குறிப்பிட்ட சில பல்கலைக்கழகத்தில் எம்சிஏ., எம்.எஸ்சி (ஐடி) படித்தவர்கள், எம்எஸ்சி சிஎஸ் (கம்ப்யூட்டர் சயின்ஸ்)க்கு இணையான கல்வி பெறவில்லை என்ற அறிவிப்பால் 5000க்கும் மேற்பட்ட முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு காலியாக உள்ள 814 கணினி ஆசிரியர் பணியிடங்களை தேர்வோ, பதிவுமூப்பின் வாயிலாகவோ நியமனம் செய்தால் மொத்தம் 54,000 ஆசிரியர்களில் 7000பேர் மட்டும் தான் கலந்துகொள்ளும் சூழல் உருவாகும். இந்த அரசாணை எண் 26 என்பது 50000 கணினி ஆசிரியர்கள் குடும்பத்தின் வாழ்வை முற்றிலும் பாதிக்கும் என்று மேற்கண்ட ஆசிரியர் சங்கம் கூறுகிறது.

புறக்கணிக்கப்படும் கணினி ஆசிரியர்கள்
மற்ற பாட ஆசிரியர்கள் போன்று அல்லாமல் டிஇஓ, ஏஇஇஓ போன்ற தேர்வு எழுதவும் கணினி ஆசிரியர்களுக்கு அனுமதி இல்லை.
மத்திய அரசின் நிதியை முறையாக பயன்படுத்தி (தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை)பள்ளிகள் தோறும் குறைந்த பட்சம் 30 கணினிகளுடன் கணினி ஆய்வகங்கள் அமைத்து, பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியர் நியமனம் செய்து கணினி அறிவியல் பாடத்தை ஆரம்ப கல்வி முதலே நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தின் கிராமப்புற அரசுப் பள்ளி ஏழை எளிய மாணவர்களும், அரசுப்பள்ளிகளும் மேன்மையடைவார்கள் என்றும் அச்சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜமுனா ராணி வெளியிட்டுள்ள செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்
--
வணக்கம்
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

31 comments:

  1. ---------- அவர்களே நீங்கள் சொல்வது சரிதான். இருப்பினும் இயற்பியல் படித்தவர்கள் இயற்பியல் முதுகலைஆசிரியராக மட்டும் பணியாற்றுகின்றனர், ஆனால் நீங்கள் சொல்லும் M.Sc.,(IT), MCA.,முடித்தவர்கள் கணினி என்ற வார்த்தையை பயன்படுத்தி படித்ததனால் அவர்களையும் இதில் சேர்த்து கொள்வது நியாயமா? அவர்களுக்கு உள்ள MAJOR யை பயன்படுத்தி கொள்ளவேண்டும். கணினி அறிவியல் முதுகலை படித்தவர்களின் வாய்ப்பு கணினி அறிவியல் முதுகலைக்கு மட்டும் என்ற சூழலில் நீங்கள் அந்த வாய்ப்பைக் கேட்பது தவறு.

    ReplyDelete
    Replies
    1. --------- COMPUTER APPLICATION AND COMPUTER INFORMATION TECHNOLOGY COURSE ARE HAVE THE GOVT SCHOOL

      Delete
  2. Friend ,then how can you teach computer application lesson in 11 & 12 standard becasuseyou are computer science graduate,see MCA Subjects are more difficult than MSc computer degree.we are all under one category ,why we blame on each other.

    ReplyDelete
  3. Neega etha sonnalu intha thermaco madayangalluku puriyathu

    ReplyDelete
    Replies
    1. Idhey veyakyanam indha exam m.sc cs mudichavaga eligible illa mca matudha eligible nu soilirudha ne ipadi m.sc cs mudichavagaluku support ah pesuviya

      Delete
  4. ???????????? Is computer teachers life

    ReplyDelete
  5. MSC IT and MCA with bed also eligible u people MSC cs don't expect less people in a race to win... Run fast aduthavana thalli vittutu first vara try pannathiga ...

    ReplyDelete
    Replies
    1. Idhey veyakyanam indha exam m.sc cs mudichavaga eligible illa mca matudha eligible nu soilirudha ne ipadi m.sc cs mudichavagaluku support ah pesuviya

      Delete
  6. Is your MSC cs is stronger than MCA ... Ask your self... Even if u think yes ... Then face them...u so talented na....

    ReplyDelete
    Replies
    1. MCA KASTAM NA YE PADICHA PESAMA M.SC PANAVENDIYADHU DHANA

      Delete
    2. Apo avlo kastam illadha m.sc ah ne sulabama padichirukalamey arivali

      Delete
  7. Govt not announced qualifications. Why are you quarreling. Unity is strength

    ReplyDelete
  8. Govt not announced qualifications. Why are you quarreling. Unity is strength

    ReplyDelete
  9. MSC cs eligible illa solla mattanga kuda theriyala.. Nice knowledge u have..mr unknown

    ReplyDelete
  10. Soilamataga sari soina ne m.sc cs Ku chance thaganu soiluvaiya ipa ivlo vai pesaraye apa pesuvayanu dha keta adha naila padi mr genius

    ReplyDelete
  11. computer staff lam ottrumaiya irunthom ipa evanuga sandaiya create panni viduranuga pa pz dont fight and parshality ug and pg cs members

    ReplyDelete
  12. computer staff lam ottrumaiya irunthom ipa evanuga sandaiya create panni viduranuga pa pz dont fight and parshality ug and pg cs members

    ReplyDelete
  13. Ug Ku tet
    Pg Ku trb
    M.sc is eligible for pg trb adhum cross major la iruka kudadhu only m.sc computer science matudha.

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. TET IRUNTHAL KUDA PARAVALAIYE.... TET EXAM CS GROUP LU EILA...

    ReplyDelete
  16. TET IRUNTHAL KUDA PARAVALAIYE.... TET EXAM CS GROUP LU EILA...

    ReplyDelete
  17. OK educational minister... U decided na app OK u the government na..nan MCA padikkanuma MSC padikkanuma nan than decide pannanum neenga illa unknown.. Cross major Ku b.ed allow panna government sollatum MSC it eligible or not nu MSC cs only eligible nu kanavu venum na kandukka..

    ReplyDelete
  18. Govt soinalum naga vidamatom ipo nega case podurigala apo naga case file panuvom.apo pesikalam

    ReplyDelete
  19. M.sc matudha eligible yethana case venalum file panikoga idhalam yegaluku plus point dha

    ReplyDelete
  20. 814 posting podalanalum ok msc matudha eligible nu oru clear go achum kedaikum

    ReplyDelete
  21. You are very genius Mr Prasanna sure she. Ungalukkthan teacher post. You can only work under thermagoal scientist

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி