தலைமை ஆசிரியரை மாற்றாதீங்க... கெஞ்சிய மாணவர்கள்! போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2019

தலைமை ஆசிரியரை மாற்றாதீங்க... கெஞ்சிய மாணவர்கள்! போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள்


திருப்பத்தூர், அருகேயுள்ள சோழம்பட்டி கிராமத்தில் மாறுதல் செய்யப்பட்ட தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியரை மீண்டும் அதே பள்ளியில் நியமிக்கக்கோரி பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சோழம்பட்டி கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி 1975-ம் ஆண்டு 120 மாணவர்களுடன் தொடங்கப்பட்டு படிப்படியாகக் குறைந்து ஒரே ஒருமாணவன் பயிலும் பள்ளிக்கூடமாக மாறியது.

இந்த நிலையில், ஏற்கெனவே அங்கு பணிபுரிந்த சகாயராஜ் என்ற ஆசிரியர் 2013-ல் அப்பள்ளியில் மீண்டும் ஆசிரியாகப் பொறுப்பேற்று ஒரு மாணவனாக இருந்த பள்ளியை 50 பேர் படிக்கும் நிலைக்கு கிராமப் பெரியவர்களுடன் சேர்ந்து உயர்த்தி தற்போதும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், கடந்தவாரம் நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக அருகில்உள்ள கீழநிலை என்ற கிராமத்துக்கு மாற்றப்பட்டார். மேலும், திங்கள்கிழமையன்று பள்ளிக்கு வந்த குழந்தைகள் தலைமை ஆசிரியர் மாற்றப்பட்டதை அறிந்து பெற்றோர்களுடன் பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். த

கவலறிந்த கண்டவராயன்பட்டி போலீஸார் சமாதான முயற்சியில் ஈடுபட்டனர். பலன் அளிக்காததால் விரைந்து வந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சாந்தி கிராம மக்களிடமும், பள்ளிக்குழந்தைகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி அதே தலைமை ஆசிரியரைப் பள்ளிக்கு வரவழைப்பதாக உறுதியளித்து அத்தலைமை ஆசிரியரைப்பள்ளிக்கு வரவழைத்தார். அதைத் தொடர்ந்து பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

பேச்சுவார்த்தை நடத்த வந்த உதவித் தொடக்கக் கல்வி அலுவலரிடம் மாணவர்கள் திரும்பவும் அதே ஆசிரியர் வேண்டும் என்று கெஞ்சியது கிராமத்தினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி