விதிமீறல்கள் கூடாது : தேர்வு துறை எச்சரிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 7, 2019

விதிமீறல்கள் கூடாது : தேர்வு துறை எச்சரிக்கை


செய்முறை தேர்வுகளில், எந்த விதிமீறலுக்கும் இடம் தரக்கூடாது' என, ஆசிரியர்களுக்கு, எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பிப்., 1ல் செய்முறை தேர்வு துவங்கியது.

 மாவட்ட வாரியாக, 12ம் தேதிக்குள் இந்த தேர்வை முடித்து, மதிப்பெண் பட்டியல் தயாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.உத்தரவுஅதேபோல, பிளஸ் 1 வகுப்புக்கு, வரும், 13லும், 10ம் வகுப்புக்கு, 21லும் செய்முறை தேர்வுகளை துவக்கி, இரண்டு வாரங்களில்முடிக்க, தேர்வுத்துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

இதில், பல பள்ளிகளில், விதிமுறைகளை கடைப்பிடிக்காமல், பெயரளவில் செய்முறை தேர்வை நடத்துவதாக புகார் எழுந்துள்ளது. மாணவர்களுக்கு, ஆய்வக உபகரணங்களின் பெயர் கூட தெரியாமல், செய்முறை தேர்வை முடித்து விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து, தேர்வுத்துறை சார்பில், பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பிரித்தறியும் திறன்அதில், 'செய்முறை தேர்வை, மாணவர்களின் திறன் அறியும் வகையில் நடத்த வேண்டும். அதற்கு முன், ஆய்வக உபகரணங்கள், ரசாயன பொருட்களை பிரித்தறியும் திறன் இருக்கும் வகையில், பயிற்சிகளை முறையாக வழங்க வேண்டும். 'இதில், விதிமீறலுக்கு இடம் தரக்கூடாது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி